நெல்லை, கோவை, திருச்சி, வேலூர் உட்பட பல நகரங்களில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் வெயிலின் கடுமை அதிகமாக உள்ளதால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால், சாலைகளில் போக்குவரத்து குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் வெப்பம் 112 டிகிரியைத் தொட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இதுவே மிக அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனால், வெள்ளரி, இளநீர் மற்றும் பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments