Sunday, May 20, 2012

thumbnail

முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கான சதித் திட்டத்தை தீட்டி, மக்களை கேரள அரசு அச்சுறுத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கான சதித் திட்டத்தை தீட்டி, மக்களை கேரள அரசு அச்சுறுத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு, தமிழக அரசு மற்றும் விவசாய் பிரதிநிதிகளுடன் நடத்த விரும்பும் பேச்சு வார்த்தை, சூழ்ச்சித் திட்டம் என்று விமர்சித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் மீது சட்டப்பூர்வமான உரிமை இன்னும் 900 ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு இருப்பதாக தெரிவித்துள்ள வைகோ, கேரள அரசு அணைக்கு ஆபத்து இருப்பதாக பொய் பிரசாரங்கள் செய்து வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அணை பாதுகாப்பாக இருப்பதாக உயர்மட்ட குழு தெரிவித்துள்ள போதும், நியாமற்ற முறையில் அணையின் நீர்மட்டத்தை குறைத்துள்ளதால், தமிழகத்திற்கு கடந்த சில ஆண்டுகளில் சுமார் 4000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About