Friday, August 10, 2012

thumbnail

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு ரூ.50 லட்சம் பரிசு/Rs 50 lakh and two acre land to Kom was taken at a cabinet meeting presided over by Chief Minister O Ibobi singh

இம்பால், ஆக. 10-

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் இபோபிசிங் தலைமையில் நடைபெற்ற மணிப்பூர் அமைச்சரவைக் கூட்டத்தில், மேரிகோமுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், ரூ.50 லட்சம் பரிசு மற்றும் 2 ஏக்கர் நிலம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் மேரிகோமுக்கு மாநில காவல்துறையில், கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு பதவிக்கு இணையான பதவி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மேரிகோம் இன்னும் சில நாட்களில் நாடு திரும்பியதும் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About