வேலூர் : வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் பி.டெக்., படித்து வரும் வெளிமாநில மாணவர்கள் 3 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில் தனுதத்தா ரெட்டி(ஆந்திரா), ராஜூ சோநாத்(ஜெய்பூர்), மாருதி(ஆந்திரா), மணிகண்டன்(ஆந்திரா), ஜெய்சங்கர்(ஆந்திரா) ஆகியோர் பி.டெக் படித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும் நேற்று இரவு வேலூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்தி விட்டு தகராறு செய்துள்ளனர். பின்னர் அதிகாலை 4 மணியளவில் காரில் ஹாஸ்டலுக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் காட்பாடி அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தனுதத்தா ரெட்டி, ராஜூ சோநாத், மாருதி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மணிகண்டன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் படுகாயங்களுடன் காட்பாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments