Saturday, August 04, 2012

thumbnail

சாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது./Haryana CM announces Rs.1 cr cash reward for Saina

சாய்னா நேவாலுக்கு ஹரியானா அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் சாய்னாவின் தந்தை ஹர்ஜித் சிங், சாய்னாவின் அயராத உழைப்புக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் இந்த பதக்க வெற்றி என்று ஆனந்த கண்ணீருடன் கூறியுள்ளார்.

எனினும் உன்னை இறுதி போட்டியில் நான் பார்க்க வேண்டும் என கூறிய தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாது போனது கவலையளிப்பதாக மனமுருகினார் சாய்னா நேவால். எனினும் நாட்டுக்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் தான் பதக்கம் வென்றது, இந்தியாவின் இளம் சமுதாயத்தினர் பேட்மிண்டன் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்த உத்வேகம் அளித்தால் மகிழ்வடைவேன் என கூறிய அவர், சீனாவுடன் மோதக்கூடியவர் சாய்னா மட்டுமே என்ற நிலை மாற வேண்டும் என்றார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About