ஆயிரம்
சூரியன் சுட்டாலும்
கருணையின்
வண்ணம் கரைந்தாலும்வான் வரை அதர்மம் ஆண்டாலும்
மனிதன் அன்பை மறந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே
காதல் என்றும் அழிவதில்லை
பருவங்கள் உருவம் மாறினாலும்
குழந்தை சிரிக்க மறந்தாலும்
இயற்கையில் விதி தடம் புரண்டாலும்
உன் காதல் அழியாதே
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை
இனியென்றும் இல்லை வேதனை
புதிதாய் பிறப்பாய்
வழியெங்கும் உன் முன் பூமழை
எந்நாளும் உன் காதல்
இது வாழும் சத்தியமே
தொலையாதே
எந்த இருளிலும் மறையாதே
நெஞ்சே எழு நெஞ்சே எழு
நெஞ்சே எழு நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை