Friday, August 31, 2012

thumbnail

சொத்து குவிப்பு வழக்கு சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றம்

பெங்களூரு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதால், வழக்கு விசாரணை தற்காலிகமாக, சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, புதிய நீதிபதியை நியமிக்க, அரசு ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், "இந்த வழக்கை, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும், சி.பி.ஐ., கோர்ட், தற்காலிகமாக விசாரிக்க வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி சோமராஜு, 58, ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கவுள்ளார். இந்த வழக்கு, செப்டம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
thumbnail

செல்போன் நிறுவனங்களுக்குபுதுவிதி அமல்-தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும்

புதுடில்லி: செல்போன் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் செல்போன் ஹேண்ட் செட்டுகள் குறித்து புதுவிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய தொலை தொடர்‌புத்துறை அமைச்சர் ‌தெரிவித்தார். செல் போன் கோபுரங்களால் அதிகளவு கதிர்வீச்சுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் புதிய விதிகள் குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் வருமாறு:
‌செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் தற்போது உள்ள கதிர்வீச்சு அளவை 10 -ல் ஒரு பங்காக குறைத்திட வேண்டும். இரு செல்போன் கோபுரங்கள் வைத்துள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குறைந்த பட்சம் 35 மீ தொலைவில் இருக்க வேண்டும்.

மேலும் செல்போன் ஹேண்ட்செட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு அ‌ட்டை பெட்டிகளில் , செல்போன்களின் கதிர்வீச்சு அளவினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு செல்போன்களின் கதிர்வீச்சு அளவும் குறைக்க வேண்டும். இந்த விதிமுறைகள் இன்று முதல் (செப்டம்பர் -1) அமலுக்கு வருகிறது. இப்புதிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு குறைபட்சம் ரூ . 5 லட்சம வரை அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
thumbnail

பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு: அரசும் மக்களும் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள்- கவர்னர் ரோசய்யா பேட்டி

தமிழக கவர்னர் ரோசய்யா பதவி ஏற்று நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, கவர்னர் ரோசய்யா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்தார். அவருடன் அவருடைய மனைவி சிவலட்சுமி அம்மாள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.
 
கோவில் வாசலில், கவர்னருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்களும், தகவல் மைய தலைவர் கே.அனந்தகுமார் ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, மற்றும் கார்த்திகேயன், பிரபாகர் ரெட்டி, மோகன் ராவ் உள்ளிட்ட தகவல் மைய உறுப்பினர்களும், கவர்னரை கோவிலுக்குள் அழைத்து வந்தனர்.
 
அதைத்தொடர்ந்து ஏறக்குறைய 15 நிமிடம் வெங்கடாசலபதிக்கு, கவர்னர் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் பெயருக்கு அர்ச்சனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் வெங்கடாசலபதி, அலமேலு தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
 
கவர்னர் பயபக்தியுடன் வெங்கடாசலபதியை வழிபட்டார். பின்னர், கோவிலையொட்டி உள்ள தகவல் மைய மண்டபத்தில், தகவல் மையம் சார்பில், கவர்னர் ரோசய்யாவுக்கு, தகவல் மையத்தின் தலைவர் அனந்தகுமார் ரெட்டி பட்டு அங்கவஸ்திரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
இதைத்தொடர்ந்து, கவர்னர் ரோசய்யா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
 
தமிழக கவர்னராக பொறுப்பேற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. தமிழக அரசும், அதிகாரிகளும், தமிழக மக்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, வெங்கடாசலபதி, அலமேலு தாயாரை தரிசித்தேன். மனது நிறைவாக உள்ளது.வெங்கடாசலபதியை தரிசிக்க திருப்பதிக்கு செல்லவேண்டும் என்றில்லை. இங்கேயே தரிசிக்கலாம்.
 
இவ்வாறு கவர்னர் ரோசய்யா கூறினார்.
 
கோவிலில் இருந்து புறப்படும் முன், கோவிலில் வழக்கமாக பவுர்ணமியையட்டி நடைபெறும் கருட சேவை உற்சவத்திலும் கவர்னர் ரோசய்யா கலந்துகொண்டு வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். 
thumbnail

கல்லூரி கட்டிட விபத்து வழக்கில் ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன்

காஞ்சீபுரம் மாவட்டம், குன்னத்தில் 'ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி' என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு மைதானத்திடல் கட்டும் போது, கட்டுமானம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.  

இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரியின் நிர்வாகி ஜேப்பியாரை (வயது 73) கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆக.30-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
thumbnail

மழையால் தாமதமானது: அண்ணா நூற்றாண்டு வளைவு நாளை இடிக்கப்படுகிறது- பஸ் போக்குவரத்து மாற்றம்

சென்னை நகரின் முக்கிய பகுதியான அண்ணாநகருக்கு பூந்தமல்லி  சாலையில் இருந்து செல்லும் நுழைவு வாயிலில் அண்ணா நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு வளைவு முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வைர விழா பிறந்தநாள் நினைவாக கட்டப்பட்டது.

இதை மறைந்த எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1986-ம் ஆண்டு திறந்து வைத்தார். 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த வளைவை  ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். சிறப்பு வாய்ந்த அண்ணா நினைவு வளைவு நாளை (சனிக்கிழமை) அங்கிருந்து அகற்றப்படுகிறது. பூந்தமல்லி சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, அண்ணாநகர் ரோடு ஆகிய மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் கடுமையான போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவானதால் அந்த பகுதியில் 3 சாலைகளிலும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. ரூ.117 கோடி செலவில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்ட ஒதுக்கியுள்ளது.

மேம்பாலம் கட்டுவதற்கு அண்ணா நூற்றாண்டு வளைவு இடைïறாக இருப்ப தாக கருதியதால் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. அங்குள்ள வளைவுகளை கிரேன் மூலம் தூக்கி எடுக்கவும் மற்ற பகுதிகளை இடித்து சமப்படுத்தவும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து அந்த பணிகளை தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் அண்ணா நூற்றாண்டு நினைவு தூண் இடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பணி தொடர முடியவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தாதமானது. தற்போது நிலைமை சீரானதால் நூற்றாண்டு வளைவை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இந்த பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசாரின் அனுமதியையும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  பெற்று தயாராக இருக்கிறார்கள். எனவே நாளை இரவு இந்த பணி தொடங்கப்படுகிறது. அகற்றப்படும் 2 வளைவுகளும் அண்ணாநகர் 3-வது அவென்யூ அருகே கூவம் ஆற்றோரம் நிறுவப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வளைவு அகற்றப்பட்டு தூண்கள் இடிக்கப்படுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.   
thumbnail

20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என்ஜினீயர்கள் சாதனை

சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனி அது பற்றி கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி அமெரிக்க ‘ஏரோ நாட்டிக்கல்’ என்ஜினீயர்கள் வடிவமைத்துள்ளனர்.

ரோடுகளில் 4 சக்கரங்களில் செல்லும்  இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானம் ஆக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில் பறக்கலாம்.

2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமானத்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம். பின்னர் இதை தரை இறக்கும் போது மீண்டும் கார் ஆக மாற்றி வீட்டின் போர்டிகோவில் பார்க்கிங் செய்து கொள்ளலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 30, 2012

thumbnail

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜான்கோவிக், இவானோவிக் 3-வது சுற்றுக்கு தகுதி

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் ஆட உலகின் முதல்நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிக் தகுதி பெற்றுள்ளார். நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இவானோவிக், ஸ்வீடனின் சோபியா அர்விட்சானை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இவானோவிக் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அர்விட்சானை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
 
மற்றொரு செர்பிய வீராங்கனையான ஜெலினா ஜான்கோவிக், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் லாரா அர்ரபரேனா வெகினோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் வெகினோவை 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி, ஜான்கோவிக் 3-வது சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளார். 
thumbnail

கிறிஸ்தவ தொண்டு நிறுவன மோசடி: பெண் ஏஜன்ட் மீது புகார்

சென்னை:கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்த, தொண்டு நிறுவன பெண் ஏஜன்ட் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த திவ்யா,34, மற்றும் நாகம்மா,50, உள்ளிட்ட, 40 பேர் நேற்று காலை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், கமிஷனரிடம் கொடுத்த புகார்:சென்னை, "ஹெச்.ஐ.எம்.,' என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி, கிறிஸ்தவ மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்த, ஜான் பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

திருமுல்லைவாயலைச் சேர்ந்த லீலாவதி, ஜான் பிரபாகரனின் ஏஜன்டாக செயல்பட்டார். எங்களை சந்தித்த லீலாவதி, "ஒரு முறை, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், தொண்டு நிறுவனத்தின் மூலம், மாதம், 1,250 ரூபாய் கிடைக்கும்' என்றார்."அவ்வளவு தொகையை, மாதா மாதம் எப்படி கொடுக்க முடியும்' எனக் கேட்டோம். வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனத்திற்கு, அதிகளவில் பணம் வருவதாக, லீலாவதி எங்களிடம் கூறினார்.

அதை நம்பி, லீலாவதியிடம் பணத்தை கொடுத்தோம். எங்கள் பகுதியைச் சேர்ந்த, 500 பேரிடம், 65 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு, ஜான் பிரபாகரன் மற்றும் லீலாவதி உட்பட, அவரது ஏஜன்டுகள் தலைமறைவாகி விட்டனர். மோசடி கும்பலை கைது செய்து, எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
thumbnail

நிலக்கரி ஊழலில் சி.பி.ஐ. இன்னும் ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை: நாளையுடன் கெடு முடிகிறது

பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித்துறையை தன்வசம் வைத்திருந்த காலக்கட்டத்தில் (2004-09), 142 நிலக்கரி சுரங்கங்கள் ஏலமின்றி பல கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டன. இதில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் கணித்து அறிக்கை அளித்துள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாக கூறப்படும் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி சி.பி.ஐ., தனது முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து நிலக்கரித்துறை செயலாளர், இணைச்செயலாளர்கள் உள்ளிட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. முன்னுரிமை அடிப்படையில், துரிதகதியாக சுரங்க ஒதுக்கீடு பெற்றுள்ள 12 கம்பெனிகள்மீது சி.பி.ஐ.யின் கழுகுப்பார்வை படிந்துள்ளது. அவற்றில் 9 சுரங்கங்கள் சத்தீஸ்கார் மாநிலத்திலும், 3 சுரங்கங்கள் ஜார்கண்ட் மாநிலத்திலும் உள்ளன. இந்த 12 சுரங்கங்களிலும் இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
குறைந்த விலைக்கு இவற்றை ஒதுக்கீடு பெற்றுவிட்டு, கூடுதல் விலைக்கு பிற நிறுவனங்களுக்கு விற்பதற்காகத்தான் இவற்றில் நிலக்கரி வெட்டியெடுக்கப்படவில்லை என நம்பப்படுகிறது. இந்த 12 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களையும், நிலக்கரி வெட்டியெடுக்கப்படாதது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையையும் பெறுவதற்காக நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகளை சி.பி.ஐ. குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மாநில அரசிடமிருந்து 3 நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சி.பி.ஐ. கூடுதல் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒதுக்கீடு பெற்றுவிட்டு, இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்காத நிறுவனங்களிடம், அதற்கான விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சி.பி.ஐ. குழுவினரிடம் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றில் சில நிறுவனங்கள் 2005-ம் ஆண்டே சுரங்க ஒதுக்கீடு பெற்றுவிட்டு இன்னும் நிலக்கரி வெட்டியெடுக்கவில்லை.
 
இப்படி சி.பி.ஐ. விசாரணை நடந்து வந்தாலும்கூட, முதல் நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்த 3 மாதங்களுக்குள், முதல் தகவல் அறிக்கையை (வழக்கு) பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. அந்தக் கெடு நாளை முடிகிறது. ஆனால் இதுவரை நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு வழக்கைக்கூட பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

குஜராத்தில் நடுவானில் மோதி சிதறிய 2 இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்- 9 வீரர்கள் பலி

ஜாம்நகர்: குஜராத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டு, சிதறி உடைந்து விழுந்ததில் 9 பேர் வீரர்கள் பலியாகிவிட்டனர்.
விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தளத்தில் இருந்து இன்று பயிற்சிக்காகப் புறப்பட்டன.
பகல் 12.25 மணியளவில் ஜாம்நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சர்மத் கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது திடீரென இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.
பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கையும் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் பின் பகுதியும் மோதிக் கொண்டன. இதில் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து விழுந்தது. தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரும் பலமுறை குட்டிக்கர்ணம் அடித்தபடி தரையில் விழுந்து நொறுங்கியது.
அதே போல பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கை உடைந்து சிதறியதோடு, அந்த ஹெலிகாப்டரும் படுவேகத்தில் தரையில் விழுந்து சிதறியது.
இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 9 வீரர்களும் பலியாகிவிட்டனர். மேலும் தரையில் இருந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளன.
இந்த முழு மோதல் சம்பவத்தையும் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை டிவி 7 குஜராத்தி சேனல் ஒளிபரப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத குரு அஸாராம் பாபு உள்ளிட்ட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர் கோத்ராவில் தரையிறங்குகையில் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் நடந்த மறுநாளே விமானப்படை ஹெலிகாப்டர்கள் மோதிவிபத்துக்குள்ளாகின என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம்: பாராளுமன்றம் 7-வது நாளாக முடக்கம்

நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில் தவறான கொள்கையை கடைப்பிடித்ததால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து முறைகேடு நடந்த காலகட்டத்தில் நிலக்கரி துறை பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கூறி வருகிறது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் இந்த பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதனால் பாராளுமன்றம் தொடங்கியது முதல் 6 நாட்களாக அலுவல் எதுவும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என்று பாரதீய ஜனதா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதற்கிடையே ஒருநாள் விடுமுறைக்குப்பின் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.

அப்போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினார்கள். சபையில் கடும் அமளி நிலவியதால் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் டெல்லி மேல்-சபையிலும் காலை 11 மணிக்கு சபை கூடியதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. அப்போதும் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளி ஏற்படுத்தியதால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக 7-வது நாளாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது.
thumbnail

நில நடுக்கத்தால் பதட்டம்: கலிபோர்னியா நகரில் அவசர நிலை பிரகடனம்


அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பதட்டத்தை அடுத்து, அவசர நிலை அமெரிக்காவின் ஒரு பகுதியில் நேற்று ஐசக் சூறாவளி தாக்கியது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கலிபோர்னியா நகரான பிராவ்லியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் வீச்சு 5.5 ஆக பதிவானது.


சில நிமிடங்கள் நீடித்த நில நடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. மாடிகளில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர்கள் சாய்ந்து விழுந்தன. பெரிய கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. கடலில் நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. உயிர்ச்சேதங்கள் இல்லாவிட்டாலும், ஏராளமான பொருள் சேதங்கள் ஏற்பட்டன.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். நில நடுக்கத்தால் பள்ளி கட்டிடங்கள், தேசிய மாட்டிறைச்சி கூடம், அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

மின் கம்பங்கள், மின் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார சப்ளை கிடையாது. குடிதண்ணீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. பதட்டத்தை போக்கவும், மின்சப்ளை, குடிநீர் வினியோகம், கட்டிடங்கள், சாலைகளை விரைந்து செப்பனிட வசதியாக, கலிபோர்னியா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சிலுவை சங்கத்தினரும், அரசு ஊழியர்களும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
thumbnail

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்களை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்க மக்கள் தொடர்பாளர் சடையன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுதாக்கல் செய்தார். அதில் திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

ஊழியர்களின் அலட்சியப் போக்கால் இது நடந்துள்ளது. இது போன்று  நடைபெறாமல் தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஆறுமுகச்சாமி கொண்டடிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு  சார்பில் தலைமை  வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு கூடி விவாதித்தது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தது. திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் எலியை ஒழிக்க தவறிய மருத்துவர்கள், ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே தலைமை நீதிபதி இக்பால், "அரசின் நடவடிக்கைகள் எழுத்து வடிவில்தான் உள்ளது. செயல் பாட்டில் இல்லை'' என்று கருத்து தெரிவித்தார். மனுதாரர் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதாடியதாவது:-

ஆஸ்பத்திரியில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாய்கள் படுத்து இருக்கும் படங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. நோயாளியின் அறையை நாயும் பங்கிட்டு கொண்டது போல் உள்ளது. ஐ.சி.யு.வில் நோயாளி, மருத்துவர், நர்சுகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. நோயாளியின் உறவினர் கூட அனுமதிக்கப்பட  மாட்டார். எனவே ஐ.சி.யூ.வில் எலி எப்படி சென்றது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியதும் தலைமை நீதிபதி குறுக்கிட்டு துளைகள் இருந்திருக்க கூடும் என்றார். தொடர்ந்து வக்கீல் ஜார்ஜ்  வில்லியம்ஸ் வாதாடுகையில், "ஒரு பத்திரிகையில் தாய்-சேய் படம் போட்டு அவர்களைச் சுற்றி எலிகள் இருப்பது போல் கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சி  தலைவர்களுக்கு கறுப்பு பூனை படை பாது காப்பு அளிப்பது போல் நோயாளிகளுக்கு எலிகள் பாதுகாப்பு கொடுப்பது போல் உள்ளது.

ஆஸ்பத்திரிகள் செல்லப் பிராணிகள் வசிப்பிடமாக மாறி வருவதையே காட்டுகிறது'' என்றார். பின்னர்  நீதிபதிகள், "மருத்துவமனைகளில், எலி, பூனை, நாய் தொல்லையை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் 4 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய  வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 

Wednesday, August 29, 2012

thumbnail

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளராக மிட் ரோம்னி தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 6-ந் தேதி நடைபெறுகிறது. அதில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக புளோரிடா மாகாணம் தம்பாவில் அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. அதில், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மிட் ரோம்னி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தேவையான 1,144 பிரதிநிதிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்தது. மாநாட்டில் இன்று ஏற்புரை நிகழ்த்திய பிறகு, ரோம்னியின் தேர்வு அதிகாரப்பூர்வமாகி விடும். அன்பிறகுதான், தேர்தல் நிதியை அவர் செலவழிக்க முடியும்.
 
 65 வயதான மிட் ரோம்னி, மசாசுசெட்ஸ் மாகாண கவர்னராக இருந்தவர் ஆவர். இந்த மாநாட்டில், துணை ஜனாதிபதி வேட்பாளராக பால் ரியான் தேர்வு செய்யப்பட்டார்.
thumbnail

ஊழல் புகாரில் சிக்கிய சீன அதிகாரி 31 மில்லியன் டாலர் பணத்துடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓட்டம்

சீனாவில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்குள்ள லியோனிங் மாகாணம் பெங்க்செங்க் நகரத்தில் அக்கட்சியின் செயலாளராக வேலை பார்த்து வந்தவர் வேங் குவாங்கியாங். அவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இந்நிலையில் அவர் 31.5 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் தனது மனைவியுடன் அமெரிக்கா தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.  வெளிப்படையாக விமானம் மூலம் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற அவரை நிர்வாகம் பிடிக்க தவறியது குறித்து கண்டனம் எழுந்துள்ளது.
 
அவர் மீது பல மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருடன் வேலை பார்த்தவர்கள் இது குறித்த செய்திகளை மறைத்து விட்டதாகவும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் அந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
thumbnail

ஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ஈரோடு வாலிபர்

ஈரோடு மூலப்பாளையம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் அருண் (வயது 27) பி.இ. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சேர்ந்த சிகா சுகிஹஷி (25) என்ற இளம்பெண்ணும் அங்கு வேலை பார்த்து வந்தார்.

இதையடுத்து அருணும், சுகியும் நட்பாக பழகினர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகிக்கு ஜப்பான் நாட்டில் உள்ள விப்ரோ கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்தது. இதைதொடர்ந்து அவர் அங்கு சென்றார். அடுத்த சில மாதங்களில் அருணுக்கும் ஜப்பானில் இன்னொரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைகிடைத்து விட்டது.

இதையடுத்து அவரும் அங்கு சென்றார். அங்கு ஒரு நாள் அருணும், சுகியும் சந்திக்கும் தருணம் கிடைத்தது. பின்னர் அடிக்கடி அவர்கள் சந்தித்து கொண்டனர். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தனர். இதையடுத்து அருண் தனது பெற்றோரிடம் ஜப்பான் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பெற்றோர் பச்சை கொடி காட்டினர். பெண்ணின் தரப்பிலும் அருணின் திறமையை கண்டு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் சுபமுகூர்த்த நாளான இன்று (புதன்கிழமை) ஈரோட்டில் திருமணம் நடந்தது. அருணின் வீட்டில் இந்து முறைப்படி காலையில் திருமணம் நடந்தது.

புரோகிதர் வேதம் ஓத அருண் ஜப்பான் காதலியின் கழுத்தில் தாலி கட்டினார். இதில் அருணின் தந்தை கிருஷ்ணசாமி, தாய் வசந்தாமணி மற்றும் மணப்பெண்ணின் தந்தை தகேஷி, தாய் இசோகோ, தங்கை யுகி சுகிஹஷி, தம்பி ஹெண்டாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நண்பர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பு விழா நடந்தது. இதில் மணமகனின் உறவினர்கள் ஜப்பான் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். புத்த மதத்தை சேர்ந்த சுகி சாமியாராக போக நினைத்தாராம். இந்த நிலையில் அருணை கண்டதும் சாமியார் கனவை கலைத்து விட்டு அவரை கரம்பிடித்து இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
thumbnail

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைத்தார்.
 
புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.
 
கொடி ஏற்றப்பட்ட பின்னர் பேராலய கலை அரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. 
 
திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் தலைமையில் 1,100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
thumbnail

பெண்களும் பாய்பிரண்ட் பிரச்சனைகளும்!

பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறார்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்' என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது.

இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்பிரண்ட்' வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்' என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது.

இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்பிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய்பிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.

இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்பிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்' செய்யும் பாய்பிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது
thumbnail

அசாமில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவோரை கைது செய்யுங்கள்: பழங்குடி அமைப்பு வலியுறுத்தல்

அசாம் மாநிலம் போடோலேண்ட் பிராந்திய நிர்வாகத்தில் உள்ள மாவட்டங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கி உள்ளது. இங்குள்ள போடோ மற்றும் பிற பழங்குடி மக்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு தாக்குதல் நடத்தும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பழங்குடி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
 
‘வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டுமானால், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் அப்பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்த உத்தரவிடவேண்டும்.
 
கலவரத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களின் குறைகளை களைய மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போடோ பகுதியில் ஊடுருவிய நபர்களை வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும். அத்துடன் அவர்கள் வசித்த இடங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஜனஜதி தர்ம சமஸ்கிருத சுரக்சா மஞ்ச் அமைப்பின் தலைவர் பி.பி.ஜமாடியா தெரிவித்தார்.
 
முன்னதாக மஞ்ச் அமைப்பின் சார்பில் ஜமாடியா தலைமையில் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கினர்.
thumbnail

நோயின்றி ஆரோக்கியமாக வாழ-நௌலிக்கிரியா

நௌலிக்கிரியா என்ற ஒரு பயிற்சியும் உண்டு. அதாவது, அலைகளைப் போல் வயிற்று சதைகளை அடிவயிற்றிலிருந்து மேல் வயிற்றுக்கும், மேல் வயிற்றிலிந்து அடிவயிற்றுக்கும் படிப்படியாய் மடித்தாற் போல் செய்ய வேண்டும். இந்த பயிற்சியின் போது மூச்சை சாதாரணமாக உள் இழுக்கவும், வெளிவிடவும் செய்ய வேண்டும். இந்த ஆசனமும் நௌலி ஆசனம் போன்றது தான். நௌலி ஆசனத்தில் கிடைக்கும் அனைத்து பலன்களும் இதில் கிடைக்கும்.

குறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலிக்கிரியாவை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.

பயன்கள்.... இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். வியாதிகள் என்னும் பிடியிலிருந்து உடல் விலகி விடும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ நௌலி உறுதுணையாக இருக்கும்.
thumbnail

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: 6 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ வழக்கு- அதிகாரிகள் கைதாகிறார்கள்/Coal mining scam

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டது. இந்த இழப்பு ஏற்பட்ட காலத்தில் நிலக்கரிதுறையை பிரதமர் மன்மோகன்சிங்தான் கவனித்து வந்தார். எனவே இழப்புக்கு பொறுப்பேற்று அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேணடும் என்று பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளன.
 
இதற்கிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 64 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்தது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த சுரங்கங்கள் கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் அமைந்துள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். சுரங்க ஒதுக்கீடு ஆவணங்களையும் வாங்கி சரிபார்த்தனர். 64 நிலக்கரி சுரங்கங்களுக்கு 1422 விண்ணப்பங்கள் நிலக்கரி அமைச்சகம் வசம் வந்திருந்தது. எந்தெந்த நிறுவனங்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தன. அவற்றில் எந்தெந்த நிறுவனங்கள் உரிமம் பெற்றன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 
அதன் தொடர்ச்சியாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோரிய விண்ணப்பங்களை ஆய்வு செய்த கமிட்டி உறுப்பினர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 3 மாநில அரசு அதகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
 
கடந்த சில மாதங்களாக நடந்து வந்த விசாரணை மூலம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது. பல நிறுவனங்களுக்கு சிபாரிசு அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
 
சில நிறுவனங்கள் நிலக்கரி சுரங்கங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி சுரங்கங்களை கைப்பற்ற ஏமாற்றுதல், மோசடி, ஊழல் உள்ளிட்ட எல்லா தவறுகளும் நடந்து இருப்பதை விசாரணை தகவல்களில் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
 
இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள விசாரணை தகவல்களின் அடிப்படையில் 6 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பிஐ. முடிவு செய்துள்ளது.
 
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனுமதி பெற்ற 6 நிறுவனங்கள் மீது ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
 
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் மோசடி செய்துள்ள தனியார் நிறுவனங்களை ஒரே எப்.ஐ.ஆரில் இடம் பெற செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
 
எனவே அந்த எப்.ஐ.ஆரில் 6 நிறுவனங்களை சேர்ந்த பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதனால் நிலக்கரி சுரங்கம் அனுமதி பெற்ற நிறுவன அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். அதுபோல முறைகேடு செய்து அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்த நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் பாயும் என்று தெரிகிறது.
 
எனவே சி.பி.ஐ. நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக சிக்குவார்கள். இது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். இதை உணர்ந்த மத்திய நிலக்கரி துறை மந்திரி ஸ்ரீபிரகாஷ் கெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மட்டுமே நாங்கள் வகுத்தோம். அத்துடன் எங்கள் வேலை முடிந்து விட்டது.
 
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்து அனுமதி கொடுத்ததற்கு அதிகாரிகளே பொறுப்பு என்று கூறியுள்ளார். இதன்மூலம் நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்கு தங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று மத்திய மந்திரி சூசகமாக தெரிவித்துள்ளார். என்றாலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, பிரதமருக்கு தெரிந்தே நடந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் பாரதீய ஜனதா கட்சி பிடிவாதமாக உள்ளது.
thumbnail

அமெரிக்காவை மிரட்டும் புயல்: 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு

கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் கடுமையாக தாக்கியது. இப்புயலுக்கு கெய்தியில் 24 பேர் பலியாகினர்.

அதே நேரத்தில் அமெரிக்காவின் புளோரிடாவில் லேசான சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது அது கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள நியூஒன்லியன்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

2005-ம் ஆண்டு இங்கு கத்ரீனா புயல் தாக்கியது. அதில் 1,800 பேர் பலியாகினர். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நகரை மீண்டும் புயல் தாக்கும் அபாயம் உள்ளது.

எனவே லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் ஒபாமா பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டெலிவிஷனில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கையையும், மிரட்டலையும் மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும். எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
thumbnail

அஜ்மல் கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: தலைவர்கள் வேண்டுகோள்

2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் ஒருவன் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். அவன் மீது மும்பை துணை நிலை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் அவனுக்கு மரண தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது.
 
இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக தீவிரவாதி கசாப் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டான். விசாரணைக்குப் பிறகு அதுவும் தள்ளுபடியாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அதன் மீதான வழக்கு விசாரணை முடிந்து,  மரண தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைவர்கள், கசாப்பின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
thumbnail

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பய‌ங்கரவா‌தி கசாபு‌க்கு ‌‌பி‌ரியா‌ணி கொடு‌த்தது போது‌ம், உடனடியாக அவனை தூ‌க்‌கி‌ல் போடு‌ங்க‌‌ள் எ‌ன்று பா.ஜ.க வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளது.

மும்பை தாக்கு‌லி‌ல் ஈடுப‌ட்ட பய‌ங்கரவா‌தி ஜ்மல் கசாப்புக்கு ‌கீ‌ழ்‌நீ‌திம‌ன்ற‌ம் மரண தண்டனை விதித்‌தது. இந்த தீர்ப்பை மும்பை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கசா‌ப்‌பி‌ன் மே‌ல்முறை‌யீ‌ட்டு மனுவை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் இ‌ன்று த‌ள்ளுபடி செ‌ய்ததோடு, கசா‌ப் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான போ‌ர் தொடு‌த்தை ஏ‌ற்று‌க் கொ‌ள்ள முடியாது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

இது தொடர்பாக பேசிய பா.ஜ.க மூ‌த்த‌த் தலைவ‌ர் முக்தர் அப்பாஸ் நக்வி, கசாபின் மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீ‌ர்ப்பை வரவேற்பதாக கூ‌றினா‌ர்.

மேலும் அவனுக்கு பிரியாணி கொடுத்தது எல்லாம் போதும், தண்டனையை உடனடியாக நிறைவேற்றி அவனை தூக்கி‌லிட வேண்டும் எ‌ன்றா‌ர்.

Tuesday, August 28, 2012

thumbnail

செப்டம்பர், அக்டோபரில் ரீலீஸாகும் மெகா சினிமாக்கள்...


சென்னை: பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.
ஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்!
வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...
மாற்றான்
சூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான்! அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.
விஸ்வரூபம்
நட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.
சுந்தர் பாண்டியன்
இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
இந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.
தாண்டவம்
விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.
பரதேசி
பாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.
படத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெரிகிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.
சிவாஜி 3 டி
இவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
thumbnail

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி

எச்.பி. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.45,000 கோடி: 24,000 பணியாளர்களை நீக்க முடிவு

நியூயார்க்: கம்ப்யூட்டர் உற்பத்தி மற்றும் சாப்ட்வேர் நிறுவனமான எச்.பி (Hewlett-Packard) கடந்த காலாண்டில் ரூ. 45,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஈடிஎஸ் நிறுவனத்தை வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு ரூ. 70,000 கோடி செலவு ஏற்பட்டதாலும் கம்ப்யூட்டர் விற்பனை சரிந்ததாலும் அந்த நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த பெரும் நஷ்டம் காரணமாக பல நாடுகளிலும் பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனமான எச்.பியில் உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 8 சதவீதம் ஊழியர்களை அதாவது, 24,000 பேரை, பணி நீக்கம் செய்ய எச்.பி. முடிவு செய்துள்ளது.

எச்.பியின் கம்ப்யூட்டர்கள் விற்பனை கடந்த காலாண்டில் 10 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக பொருளாதார தேக்க நிலையை சந்தித்து வரும் ஐரோப்பாவிலும், கடும் போட்டி காரணமாக சீனாவிலும் இந்த நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது.
thumbnail

ஓணம் பண்டிகை கொண்டாடும் கேரள மக்களுக்கு

ஓணம் பண்டிகை கொண்டாடும் வேளையில், கேரளாவைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எங்களது  மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.-----தமிழன்  

Monday, August 27, 2012

thumbnail

மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப்பணிகளுக்காக ஆண்டுதோறும் ஜூன்மாதம் 12 ம் தேதி மேட்டூர் அணையில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வாடிக்கை. இந்த ஆண்டு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தினால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறந்துவிட முடியவில்லை. தற்போது கர்நாடகத்தில் உள்ள அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் நன்றாக மழை பெய்வதால் காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தண்ணீர் திறக்கும் நாட்கள் தள்ளிப்போவதால் தங்களால் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாது என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய விவசாயிகள், சம்பா சாகுபடி பயிரிட ஏதுவாக மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். செப்டம்டர் இரண்டாவது வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால் விதைப்பு உள்ளிட்ட பணிகளை தொடங்குவதில் காலதாமதமாகிவிடும். பின்னர் பருவமழை தொடங்கிவிடும் என்பதால் இப்பொழுதே விதைப்பு பணிகளை தொடங்க ஏதுவாக உடனடியாக அரசு தண்ணீரை திறக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
thumbnail

மேலூர் பகுதியில் மேலும் 25,000 கிரானைட் கற்கள் கண்டுபிடிப்பு

மேலூர், ஆக. - 28 - பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் நேற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேலும் 25 ஆயிரம் கிரானைட் கற்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து 26 வது நாளாக நேற்றும் அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீழவளவு, அம்மன் கோவில்பட்டி, பஞ்சபாண்டவர் மலை தெற்கு பகுதியில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமானஇடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர் ரக கிரானைட் கற்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்ட வருவாய் நீதிமன்ற தனி துணை ஆட்சியர் குணசேகரன், முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் இளங்கோவன், உதவி இயக்குனர்(கலால்) ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வை மேற்கொண்ட போது பி.ஆர்.பி.நிறுவனத்துக்கு சொந்தமானதாக கூறப்படும் இடத்தில் ஒரு மிகப் பெரிய கண்டெய்னர் பூட்டி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். முக்கிய ஆவணங்கள் ஏதும் இதில் பூட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த அதிகாரிகள் அங்கிருந்த ஊழியர்களிடம் சாவியை கேட்டு திறந்து பார்த்தனர். அப்போது அந்த கண்டெய்னருக்குள் மண்வெட்டி, இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவைதான் இருந்ததாம். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 15 ஏக்கர் பரப்பளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் கிரானைட் கற்களை கண்டுபிடித்தனர். இந்த கற்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கற்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கீழையூர் பகுதிகளில் மட்டும் 21,700 கற்களும், கீழவளவில் 17,500 கற்களும் அளவிடப்பட்டுள்ளன. மீதமுள்ள கற்களை அளவிட பல மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
thumbnail

செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!

செவ்வாயின் தரையில் என்ன உள்ளது? 'கியூரியாசிட்டி'யிலிருந்து 'தாக்கல்' வந்தது!
நாசா: செவ்வாய் கிரகத்தின் தரைத்தளம் குறித்த புதிய தகவல்களை கியூரியாசிட்டி விண்கலத்தின் செம்கேம் (Chemistry and Camera) லேசர் காமரா அனுப்பியுள்ளது. இதுவரை கிடைத்திராத புதிய தகவல்கள் இதில் அடங்கியிருப்பதால் கியூரியாசிட்டியை கண்காணித்து வரும் செவ்வாய் கிரக அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியும், திரில்லும் அடைந்துள்ளனர். மிகவும் அருமையான முடிவுகளை கியூரியாசிட்டி அனுப்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டியின் செம்கேம் லேசர் கேமரா மூலம் இந்த லேசர் ஒளிக்கற்றைப் படங்கள். கிட்டத்தட்ட 500 ஒளிக்கற்றைப் படங்களை செம்கேம் அனுப்பிக் குவித்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிரக தரைத்தளத்தின் கட்டமைப்பு குறித்த உறுதியான, தெளிவான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செம்கேம் லேசர் காமராவை கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளவரான லாஸ் அலமோஸில் உள்ள தேசிய பிளானட்டரி ஆய்வக விஞ்ஞானி ரோஜர் வெய்ன்ஸ் கூறுகையில்,இதைப் பார்த்தால் பூமியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மிகவும் அரிய தகவல் இது. இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் பெரும் குஷியாகி விட்டோம். அந்தக் குஷியில் கொஞ்சம் சாம்பெய்னையும் கூட எடுத்து வாயில் விட்டுக் கொண்டோம் என்றால் பாருங்களேன் என்றார் படா குஷியுடன்.
அடுத்து இந்தப் படங்களையும், பூமியின் தரைத்தளத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மேலும், செவ்வாயில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளையும் படம் எடுத்து அனுப்பப் போகிறது கியூரியாசிட்டி. அதையும் பூமியில் உள்ள மலைச் சிகரங்கள், குன்றுகளின் தன்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கவுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள படங்களின்படி, செவ்வாயின் தரைத் தளமானது, ஹைட்ரஜன் மற்றும் மெக்னீசியத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிகிறது.
thumbnail

சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடர்ந்து அளிப்போம்: மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ

டெல்லி: தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள ராணுவத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மூலையிலும் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரல்.

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதும்கூட உதகையில் பயிற்சி கொடுக்கப்பட்டு வரும் 2 சிங்கள அதிகாரிகளை வெளியேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக எதிர்ப்பு குறித்து பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளதாவது:

இலங்கை நமது நட்பு நாடு. அதனால் அதன் ராணுவ வீரர்களுக்கு நமது ராணுவ நிலையங்களில் தொடர்ந்து பயிற்சி அளிப்போம். இதற்கு மாநில அரசுகளிடம் இருந்து சில நேரங்களில் ஆட்சேபனை எழலாம். அதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்றார் அவர்.
thumbnail

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம்/Srinivasa Ramanujan,Mathematician and autodidac

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.



இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வு

பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினான். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.
1907-11 இல் படைப்பு வெள்ளம்

ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்

நான்கு பொன்னான ஆண்டுகள்



கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான் விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.



இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.



சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளி



இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.



முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.



இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:



x^2 - 10 y^2 = +1 or -1



மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:



3 + \cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\cfrac{1}{6+\dotsb}}}}



இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.



இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு



3 + 1/6 = 19/6.



x =19, y = 6 இரண்டாவது விடை.



19^2 - 10 * 6^2 = 361 - 360 = 1



மூன்றாவது ஒருங்கு:



3 + \cfrac{1}{6+\cfrac{1}{6}}



இது கொடுக்கும் விடை: x = 117, y = 37



இதுவும் ஒரு சரியான விடைதான்.



நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.



இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான்.
thumbnail

1.85 லட்சம் கோடி ஊழல் - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு பிரதமர் மன்மோகன் சிங் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, மத்தியரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக, மத்தியரசு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் விளக்கம் அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தனியாருக்கு சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 1.85 லட்சம் கோடி இழப்பு என்று தணிக்கை அதிகாரி புகார் கூறினார். இந்த இழப்பிற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும், என்று பாஜகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர். பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் அமளியி£ல் 4 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது.
thumbnail

ஓணம் விற்பனைக்காக 20 டன் திண்டுக்கல் வாடா மல்லி/Dindukal vadamalli 20 ton - Kerala Onam Festival


திண்டுக்கல்:கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்காக, திண்டுக்கல் வாடா மல்லி பூக்கள் அனுப்புவது அதிகரித்துள்ளது.கேரளாவில் வரும் ஆக., 29ல் ஓணம் கொண்டாடப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து, ஏராளமான வாடாமல்லி பூக்கள் அனுப்பப்படுகின்றன. தினமும் 15 மினி லாரிகளில், 20 ஆயிரம் கிலோ வரை பூக்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு கிலோ வாடா மல்லி, 50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.திண்டுக்கல் பூ மார்க்கெட் பொருளாளர் சகாயம் கூறியதாவது:ஓணம் பண்டிகைக்கு இங்கிருந்து வாடா மல்லி பூக்கள் மட்டுமின்றி செண்டுமல்லி, அரளி, மரிக்கெழுந்து பூக்களும் விற்பனையாகின்றன. கேரளாவில் மழை குறைவாக இருந்தாலும் ஓணம் பண்டிகையையொட்டி, பூக்கள் வாங்குவது குறையவில்லை, என்றார்.
thumbnail

நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் விவாதத்துக்கு மத்திய அரசு தயார்- ப.சிதம்பரம்

நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், விவாதம் மட்டுமே ஜனநாயகத்துக்கு உகந்தது, விவாதிக்கத் தயார் என பிரதமர் கூறியதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஜனநாயகத்தை பலவீனமாக்கும். விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது துரதிருஷ்டவசமானது. முக்கியமான விஷயத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு மட்டும் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
பிரதமரின் அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும் என சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
thumbnail

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!


பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்ப
ூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.

முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

மருத்துவப் பயன்கள்:

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க:

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு:

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்

இஞ்சி 5 கிராம்

பூண்டு பல் 5

நல்ல மிளகு 1 ஸ்பூன்

சீரகம் 1 ஸ்பூன்

சோம்பு 1 ஸ்பூன்

கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 5 இணுக்கு

எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்
thumbnail

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி இன்று பதவியேற்பு /Dr.K.Ramasamy ,taken a charge of new VC of the Tamil Nadu Agricultural University (TNAU), Coimbatore.

வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் கே ராமசாமி இன்று பதவியேற்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் (வேளாண் மற்றும் பாசனம்) கே. இராமசாமி திங்கள்கிழமை பதவியேற்கிறார்.

இதற்கான உத்தரவை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான (வேளாண்மை) கே.இராமசாமியைப் புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1948-ல் பிறந்தவர் கே.ராமசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டம் படித்தவர். பெல்சியத்தில் உள்ள கத்தோலிக் லீயுவென் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

முனைவர் கே.இராமசாமி உயிரித்தொழில்நுட்பம், நுண்ணுயிரியல்துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் சில காலம் பணிசெய்து வந்தார்.

மிகச்சிறந்த கல்வியாளரைத் தகுதி அடிப்படையில் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க

பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக நியமித்த தமிழக ஆளுநரும், தமிழக

அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் என்றும் பெருமைக்கும்

பாராட்டிற்கும் உரியவர்களாவர்.

Saturday, August 25, 2012

thumbnail

இலங்கை ராணுவத்துக்கு உதகையில் பயிற்சி : முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்/Jayalalithaa writes to PM on training of Sri Lankan personnel

உதகை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளர்.

இது குறித்து பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை ராணுவ வீரர்கள் திசநாயக மகோத்த லாலங்கே மற்றும் ஹவாவாசம் ஆகியோருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த இரு வீரர்களுக்கும் கடந்த 4 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதையும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளனார். எனினும், இதுகுறித்து தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கை, தமிழக மக்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
thumbnail

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher Eligibility Test (TET) results

தமிழகம் முழுவதும் சுமார் ஆறேமுக்கால் லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் தாளை 2 லட்சத்து 88ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில் ஆயிரத்து 735 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-ம்  தாளை எழுதிய 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேரில் வெறும் 713 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதியவர்களில் 83 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் 18 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

About