மதுரை, ஆக., 07 : மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகளில் கிரானைட் வெட்டி எடுக்கப்படுவதாக எழுந்த புகாரினை அடுத்து ஒரு வார காலமாக கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மற்றும் பிஆர்பி எக்போர்ட்ஸ் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மீது முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.பிஆர்பி எக்போர்ட்ஸ் மற்றும் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனங்கள் மீது 12 புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments