Saturday, August 25, 2012

thumbnail

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு/Teacher Eligibility Test (TET) results

தமிழகம் முழுவதும் சுமார் ஆறேமுக்கால் லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் 12-ந் தேதி நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் தாளை 2 லட்சத்து 88ஆயிரத்து 588 பேர் எழுதினர். இதில் ஆயிரத்து 735 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2-ம்  தாளை எழுதிய 3 லட்சத்து 88 ஆயிரத்து 175 பேரில் வெறும் 713 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதியவர்களில் 83 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள் 18 பேரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About