Wednesday, October 23, 2013

thumbnail

புது யுகம்... புதிய தொலைக்காட்சி தொடக்கம்

புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்திலிருந்துபுதுயுகம்' எனும் பொழுதுப்போக்கு டிவி சேனல் 23.10.13

முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. ‘நியூ ஜெனரேஷன் மீடியா' நிறுவன தலைவர் சத்திய நாராயணன் இதனை தொடக்கி வைத்தார்.குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என்று அனைவரும் ஒருசேர அமர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் நெடுந்தொடர்கள் மற்றும் குறுந்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவாம். இந்த தொடர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளன.
பொழுதுகள் போக்குவதற்கு இல்லை அனுபவிக்கவேண்டியவை என்பதை உணர்த்தும் வகையில் காலை முதல் இரவு வரை நேயர்களை ஒருமுகப்படுத்தும் வகையில் புதுயுகம் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.புதிய கோணத்தில்இந்த டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், விவாதங்கள் என்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் புதிய கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனவாம்.
அழ வைக்காத சீரியல்கள்வீட்டுப் பெண்களை அழவைத்து அழகு பார்க்கவைப்பதிலும் முறையற்ற உறவுகளைக்காட்டி பார்வையாளர்களை வசீகரிக்கும் நோக்கமுமின்றி, நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் கேளிக்கை , பொழுதுபோக்கு , கொண்டாட்டம் அதே சமயத்தில் வாழ்க்கை மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் செய்திகளும் கொண்டதாய் புதுயுகம் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.சன் நியூஸ் சேனலுக்கு போட்டியாக புதிய தலைமுறை ஒளிபரப்பாவதைப் போர சன்டிவி சேனலுக்கு கடுமையான போட்டியை புதுயுகம் சேனல் உருவாக்கும் என்கின்றனர் ஊடக உலகத்தினர்

Monday, October 14, 2013

thumbnail

புயல்களும் பெயர்களும்

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அறிந்திருப்போம். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது ?

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.
அரசியல்வாதிகளின் பெயர்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது.
ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954 ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.
இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004 ஆம் ஆண்டில் உருவானது.
இந்தியா,வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்துள்ளன.
இந்த நாடுகள் கொடுத்துள்ள 64 பெயர்களில் 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள்ளன.
நாம் கடந்து வந்த புயல்களில் லைலா என்ற பெயர் பாகிஸ்தான் கொடுத்தது.
இந்தியா வைத்த பெயர்
ஜல் என்ற பெயர் இந்தியா கொடுத்திருந்த பெயர். சமீபத்தில் நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கிய தானே என்ற பெயரை மியான்மரும், மகாசேன் என்ற பெயர் இலங்கையாலும் கொடுக்கப்பட்டதாகும்.
தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது.
இதையடுத்து, பட்டியலில் தாய்லாந்து கொடுத்துள்ள பைலின் என்ற பெயர், இந்த புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நாடுகள்
1
2
3
4
5
6
7
8
வங்கதேசம்
Onil
Ogni
Nisha
Giri
Helen
Chapala
Ockhi
Fani
இந்தியா
Agni
Akash
Bijli
Jal
Lehar
Megh
Sagar
Vayu
மாலத்தீவுகள்
Hibaru
Gonu
Aila
Keila
Madi
Roanu
Makunu
Hikaa
மியான்மர்
Pyarr
Yemyin
Phyan
Thane
Na−nauk
Kyant
Daye
Kyarr
ஓமன்
Baaz
Sidr
Ward
Murjan
Hudhud
Nada
Luban
Maha
பாகிஸ்தான்
Fanoos
Nargis
Laila
Nilam
Nilofar
Vardah
Titli
Bulbul
இலங்கை
Mala
Rashmi
Bandu
Mahasen
Priya
Asiri
Gigum
Soba
தாய்லாந்து
Mukda
Khai−Muk
Phet
Phailin
Komen
Mora
Phethai
Amphan

About