Wednesday, August 29, 2012

thumbnail

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைத்தார்.
 
புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டது.
 
கொடி ஏற்றப்பட்ட பின்னர் பேராலய கலை அரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. 
 
திருவிழாவையொட்டி வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் தலைமையில் 1,100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About