சென்னை, ஜூன் 26- எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. 16 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மார்க் எடுத்துள்ளார்கள். மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல்: திருச்சி மாணவன் முதலிடம்
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப்பட்டியலில் திருச்சியை சேர்ந்த ஆர்.கவுதம் SKV Higher Secondary School மாணவன் முதலிடம் பெற்றார். பல்லடத்தை சேர்ந்த S.சுஷ்மிதா(Plus Two State topper of the same school) 2வது இடத்தையும், தி.நகரை சேர்ந்த ஆசிஸ் ராஜேஸ் 3வது இடமும் பிடித்தனர். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 5ம் தேதி முதல் துவங்குகிறது. ரேங்க் பட்டியலை
www.tnhealth.org என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவக் கல் லூரிகள் உள்ளன. இதில் 1,696 எம்.பி. பி.எஸ். இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி இருக்கிறது. இதில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட் டிற்கு 838 எம்.பி.பி.எஸ். சீட்டுகளும், 18 பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 898 பி.டி.எஸ். இடங்களும் கிடைக்கும். இந்த இடங்களும் கலந்தாய்வு மூலமாக நிரப்பப் படும்.
எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேர 28,275 மாணவ-மாண விகள் விண்ணப்பித்தனர். அவர்களில் 398 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட் டன. 27,877 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் கடந்த 20ஆம் தேதி ரேண்டம் நம்பர் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ, பல்மருத் துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத் துவ தேர்வுக்குழு அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தரவரிசைப் பட்டியலையும், 200-க்கு 200 கட் ஆப் மார்க் பெற்ற 10 மாணவ-மாணவிகளின் பட்டியலையும் வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரிக்கு இந்த ஆண்டு கூடுதலாக 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்து உள்ளன. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூ ரிக்கு 50 சீட்டுகள் கிடைக்கும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து உத்தேச கடிதம் வந்துவிட்டது. அடுத்ததாக அனுமதி கடிதம் வர வேண்டும்.
இதேபோல், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் மருத்துவ கவுன்சில் குழுவினர் 3 முறை ஆய்வுசெய்துவிட்டு சென்றிருக் கிறார்கள். அந்த கல்லூரியில் 100 இடங்களுக்கு அனுமதியை எதிர்பார்த்து இருக்கிறோம். அடுத்த மாதம் (ஜூலை) 15ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
தற்போது மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்கும். முதல் நாளில், உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். 6ஆம் தேதி முதல் 10 நாளைக்கு பொது கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு நாள் குறித்து சம்பந்தப் பட்ட மாணவ-மாணவிகளுக்கு அழைப் புக்கடிதம் அனுப்பப்படும். ஒருவேளை அழைப்புக்கடிதம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட கட் ஆப் மார்க் உள்ள மாண வர்கள் அதற்குரிய நாளில் கலந்தாய்விற்கு நேரடியாக வந்து கலந்து கொள்ளலாம். எனவே, கலந்தாய்விற்கு விடுபட்டு விடு வோமோ என்று எந்த மாணவ-மாணவியும் அச்சப்படத் தேவையில்லை. கலந்தாய்வு விவரங்களை சுகாதாரத்துறையின் இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
அரசு கல்லூரிகளில் 15 சதவீத இடங் கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்குச் சென்று விடும். அந்த இடங்களில் ஏற்படும் காலி இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய வற்றை நிரப்புவதற்கான 2ஆவது கட்ட கலந்தாய்வு தேதி பின்னர் தெரிவிக்கப் படும். முதல் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாண வர்களுக்கு வழக்கம்போல் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி களில் மாணவர்களிடம் இருந்து அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வந்தால் கண்டிப்பாக சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- இவ்வாறு அமைச்சர் வி.எஸ்.விஜய் கூறினார்.
மாணவிகளே அதிகம்
மருத்துவ படிப்புக்கு 28,275 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18,061 பேர் மாணவிகள். 9,816 பேர் மாணவர்கள். மாணவர்களைக் காட் டிலும் 2 மடங்கு அதிகமாக மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவர் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக இருப்பதன் இதன்மூலம் தெரிகிறது. மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளி டம் இருந்து அதிக விண்ணப்பங்கள் (11,883) வந்துள்ளன. பழங்குடியினத்தைச் சேர்ந்த 194 மாணவ-மாணவிகளும் மருத்துவ படிப்புக்கு விண்ணப் பித்துள்ளனர். மொத்த விண்ணப்பதாரர் களில் 10 ஆயிரத்து 475 பேர் குடும்பத்தில் முதல்முறையாக கல்லூரி படிப்புக்கு அடியெடுத்து வைக்க உள் ளனர். அதாவது அவர்கள் முதல் தலை முறை பட்டதாரிகள்.