Wednesday, June 20, 2012

thumbnail

வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது எதிரொலி: 10 பஸ்கள் உடைப்பு


சேலம், 
 
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் இருக்கும் குடிசைக்கு தீவைத்து, சூறையாடப்பபட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், சேலம்  மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் பனமரத்துப்பட்டி ராஜா, தாதை கார்த்தி, கறிக்கடை பெருமாள் உள்பட பலர் கைது  செய்யப்பட்டு  சேலம் சிறையில்  அடைக்கப்பட்டனர். பனமரத்துப்பட்டி ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவந்தனர். அங்கம்மாள்  காலனி பிரச்சினையில்  கைது செய்யப்பட்ட  வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அனைவர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் வீரபாண்டிஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி பிறப்பித்தார். இதற்கான உத்தரவை நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீசார்   வேலூர் சென்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் 5 ரோட்டில்  உள்ள பிரிமியர் ரோலர் மில் இடத்தை அபகரித்ததாகவும், கூட்டுறவு சொசைட்டி நிலத்தை பினாமி மூலம்  குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அபகரித்ததாகவும், சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த  பாலமோகன்ராஜ் நிலத்தை அபகரித்ததாகவும், சேலம் கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டியதாகவும் வழக்குகள் இருந்தது. 
 
இப்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது  குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது  குண்டர்   சட்டம் பாய்ந்ததால் அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால்  அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
இருப்பினும் சேலம் 3 ரோடு பகுதியில் 2 பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுபோல் சேலம் குழந்தை இயேசு பேராலயம் பகுதி, காந்தி  ஸ்டேடியம் பகுதி, புதிய பஸ்நிலையம் அருகில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் 8 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சேலம் அருகில் உள்ள மல்லூர் பகுதியிலும் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
நேற்று இரவு எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி எடப்பாடி பஸ்நிலையம் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இவரைப்போல் சேலம் மாவட்டம்  முழுவதும்
10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது  விசாரித்து வருகிறார்கள். சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தில் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.
 
புதிய பஸ் நிலையம், பழைய  பஸ் நிலையம், ஜங்சன் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நின்று கண்காணிக்கிறார்கள். சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்களில் போலீசார் பாதுகாப்புக்கு சென்றும் வந்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகம் மீது உள்ள வழக்குகள் விவரம்:-
 
1. அங்கம்மாள் காலனி நிலத்தை  ஆக்கிரமித்ததாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
2. சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்தது உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு.
3. தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை ஆக்கிரமித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு.
4. கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக  8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
5. அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி தொடர்பாக 16 பிரிவுகளின் கீழ் வழக்கு.
6. அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பலுடன் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, கூட்டு சதிசெய்ததாக வழக்கு.       

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About