Thursday, June 21, 2012

thumbnail

ஜனாதிபதி தேர்தல்: தந்தையை தொடர்ந்து அகதா சங்மாவும் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகுகிறார்

புதுடெல்லி, ஜூன்.21-  
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டார்.
 
எனவே சங்மா தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. சங்மா வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. எனவே சங்மா தேசியவாத காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியியை நேற்று ராஜினாமா செய்தார்.
 
சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அகதா அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்து விட்டு தந்தைக்கு ஆதரவு தெரிவிப்பார் என இன்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை நடந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அகதா கலந்து கொள்ளவில்லை. 'தவிர்க்க இயலாத காரணங்களால் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை’ என கட்சி தலைவர் சரத்பவாருக்கு சங்மா தகவல் தெரிவித்துள்ளார்.
 
எனவே அகதா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. அகதா விரைவில், தனது தந்தைக்கு ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது 29 வயதாகும் அகதா, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர்தான் இந்தியாவின் மிக இள வயது எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About