Saturday, June 23, 2012

thumbnail

Kavingar kannadasan birthday,கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்

முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை

மாவட்டம், சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தன

வணிகர் மரபில் பிறந்தார். தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்

பாடலாசிரியர், கவிஞர் ஆவார். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000க்கும்

மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை,

முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது

பெற்றவர்.

கவிஞர் கண்ணதாசன்
இன்று எங்கள்
திருவிழாக் கவிஞனுக்குப் பிறந்தநாள்...


தமிழ்த்தாய்க்கு
மெட்டில் சமைத்து
தட்டில் பரிமாறியவன் நீ- இசைத்
தட்டில் பரிமறியவன் நீ

உனது காதல் பாடல்களைக் கேட்டால்
காற்று
நதியில் குதித்துக் கும்மாளமிடுகிறது...
சோகப் பாடல்களைக் கேட்டால்
பூக்களில்
முகம் புதைத்து அழுகிறது...

ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும்
உன் பாடல்களின் எண்ணிக்கையை வைத்துத்தான்
காற்றின் ஈரப்பதம்
கணக்கிடப்படுகிறது...

-பழநிபாரதி
http://youtu.be/ZC6dRqDmxTQ 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About