Monday, June 18, 2012

thumbnail

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு 19ஆ‌ம் தே‌தி ஹால் டிக்கெட்

பிளஸ்2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்தமாணவர்களுக்கு உடனடி தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுகள் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம்தேதி வரை வழங்கப்படு‌கிறது எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், பிளஸ் 2 தேர்வில் பெயிலான மாணவ-மாணவிகள் ஒரு வருடத்தை வீணாக கழிக்கக்கூடாது. திறமை இருந்தால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதற்காக தமிழக அரசு பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி ூன் 22ஆ‌ம் தேதி முதல் ூலை 4ஆ‌ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வை பள்ளிக்கூட மாணவர்களாக, மாணவிகளாக எழுதி பெயிலானவர்கள், எழுதாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ஒரு காப்பி வைத்துக்கொண்டு அசலை முதல் நாள் தேர்வு எழுதும்போது தேர்வு மையத்தில் ஒப்படைக்கவேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மார்க்குக்கு குறைவாக தேர்ச்சி பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத்தேர்வும் எழுதவேண்டும்.

செய்முறை மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்யவேண்டிய தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தேர்வுகளை செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள் எ‌ன்று வசு‌ந்தராதே‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About