Thursday, June 21, 2012

thumbnail

சுரங்க உரிமம் வழங்க லஞ்சம்: எடியூரப்பா, மகன்கள், மருமகனுக்கு முன்ஜாமீன்


கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது சவுத்வெஸ்ட் நிறுவனத்துக்கு சுரங்க உரிமம் வழங்க ரூபாய் 20 கோடி லஞ்சம் பெற்றதாக எடியூரப்பா மற்றும் அவருடைய மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, அவரது மருமகன் சோகன்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

எடியூரப்பா குடும்பத்தினர் மீதான இந்த சுரங்க முறைகேடு வழக்கை சி.பி.ஐ போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி, சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் எடியூரப்பா உள்ளிட்ட 4 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எடியூரப்பாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, எடியூரப்பா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சி.பி.ஐ நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார்.

எடியூரப்பாவின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எடியூரப்பாவுக்கும் அவரது 2 மகன்கள் மற்றும் மருமகனுக்கு முன்ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About