சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்கிறேன். வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன், 24.6.2012 தேதியிட்ட இதழில், 'யாகப்புகையில் போயஸ் கார்டன்; அதிகார பயம்... பரிகார நிஜம்...'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
'போயஸ் கார்டன் மற்றும் பையனூரில் 11 மணி நேரம் யாகம் நடக்க உள்ளது. இந்த யாகம் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலம் சிறப்பாக வேண்டும். எதிரிகளின் பலம் குறையவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது'' என்று எழுதப்பட்டுள்ளது.
செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் பொய்யானது. அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிக ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வருக்கு இப்படி ஒரு யாகம் நடத்த அவசியமில்லை. ஆனால் யாகம் நடத்தப்போவதாக அட்டை படத்தில் முதல்வரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாக உள்ளது. எனவே ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதுவறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், முதல்வர் ஜெயலலிதா சார்பில் இந்த அவதூறு வழக்கை தாக்கல் செய்கிறேன். வாரம் இருமுறை வெளியாகும் ஜுனியர் விகடன், 24.6.2012 தேதியிட்ட இதழில், 'யாகப்புகையில் போயஸ் கார்டன்; அதிகார பயம்... பரிகார நிஜம்...'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
'போயஸ் கார்டன் மற்றும் பையனூரில் 11 மணி நேரம் யாகம் நடக்க உள்ளது. இந்த யாகம் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது, உடல் நலம் சிறப்பாக வேண்டும். எதிரிகளின் பலம் குறையவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது'' என்று எழுதப்பட்டுள்ளது.
செய்தியில் கூறப்பட்டுள்ள எல்லா விஷயங்களும் பொய்யானது. அதுபோன்று எந்த யாகமோ அல்லது பூஜையோ நடைபெறவில்லை. ஆனால் முதல்வருக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிக ஓட்டு பெற்று ஆட்சி அமைத்துள்ள முதல்வருக்கு இப்படி ஒரு யாகம் நடத்த அவசியமில்லை. ஆனால் யாகம் நடத்தப்போவதாக அட்டை படத்தில் முதல்வரின் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது சமுதாயத்தில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாக உள்ளது. எனவே ஜுனியர் விகடன் பத்திரிகையின் ஆசிரியர் ரா. கண்ணன், வெளியீட்டாளர் கே.அசோகன், பதிப்பாளர் எஸ்.மாதவன் ஆகியோர் மீது கிரிமினல் அவதுவறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments