Saturday, June 23, 2012

thumbnail

RANDOM NUMBER OF ANNA UNIVERSITY ON MONDAY (25TH JUNE 2012) பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 1.80 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) நாளை ஒதுக்கப்படுகிறது.

சென்னை, ஜுன் 24  பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 1.80 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) நாளை (ஜூன் 25) காலை ஒதுக்கப்படுகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவஹர், உயர் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ். ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் ஜுன் 30-ம் தேதி வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் வெளியிடப்படுகிறது.

ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றிருந்தால், ரேங்க் பட்டியலில் அத்தகையோரை வரிசைப்படுத்த முதலில் கணித பாடத்தின் மதிப்பெண் ஒப்பிடப்படும்; கணிதத்தில் சமமான மதிப்பெண் இருந்தால், இயற்பியல் பாட மதிப்பெண் ஒப்பிடப்படும்; இரண்டு பாடங்களிலும் சமமான மதிப்பெண் இருக்கும் நிலையில், 4-வது விருப்பப் பாடத்தில் (கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது உயிரியல்) மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமான மதிப்பெண்ணை மாணவர்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியின் அடிப்படையில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் நிலையில், ரேண்டம் எண்ணில் உயர் நிலையில் உள்ள எண் கணக்கில் கொள்ளப்பட்டு ரேங்க் வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி. ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About