Wednesday, June 27, 2012

thumbnail

Metropolitan Transport Corporation bus fell off the city's arterial Anna flyover today around 2 p.m. சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்த நகர பேருந்து:

சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழ‌ே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

42 பேர் காயம்: இதில் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பžஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பிரசாந்த், கண்டக்டர் ஹேமகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக பஸ்சி்ல் பயணித்தவர்களை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர். 
ஓட்டுநர் பேருந்தை இயக்கும் போது செல்போனில் பேசியபடி இருந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக எதிரே வந்த பேருந்தில் உள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து  பார்த்தவர்கள் கூறியதாவது, விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் செல்போனில் பேசியபடியே பேருந்தை திருப்பியதை நாங்கள் கண்டோம்.காதில் செல்போனை வைத்துக்கொண்டு ஸ்டேரிங்கை திருப்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் சீட் கழன்று விட்டது. இதனால் நிலைதடுமாறிய ஓட்டுநர், பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பேருந்து தடுப்புச்சுவற்றின் மீது மோதி கீழே விழுந்ததென எதிர்தரப்பில் உள்ள பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About