நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், விவாதம் மட்டுமே ஜனநாயகத்துக்கு உகந்தது, விவாதிக்கத் தயார் என பிரதமர் கூறியதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஜனநாயகத்தை பலவீனமாக்கும். விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது துரதிருஷ்டவசமானது. முக்கியமான விஷயத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு மட்டும் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
பிரதமரின் அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும் என சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், விவாதம் மட்டுமே ஜனநாயகத்துக்கு உகந்தது, விவாதிக்கத் தயார் என பிரதமர் கூறியதை எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் முடக்கப்படுவது ஜனநாயகத்தை பலவீனமாக்கும். விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது துரதிருஷ்டவசமானது. முக்கியமான விஷயத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு மட்டும் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
பிரதமரின் அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும் என சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
06:41
Tags :
P.Chidambaram/
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments