பெங்களூரு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனையா ஓய்வு பெற்றதால், வழக்கு விசாரணை தற்காலிகமாக, சி.பி.ஐ., கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிபதி மல்லிகார்ஜுனையா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, புதிய நீதிபதியை நியமிக்க, அரசு ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், "இந்த வழக்கை, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும், சி.பி.ஐ., கோர்ட், தற்காலிகமாக விசாரிக்க வேண்டும்' என, கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதனால், சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி சோமராஜு, 58, ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கவுள்ளார். இந்த வழக்கு, செப்டம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments