Friday, August 17, 2012

thumbnail

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா...ஈசன்/Esan songs


படம் : ஈசன்
பாடல் :
ஜில்லா விட்டு ஜில்லா..
இசை :
ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள் :
தஞ்சை செல்வி
பாடலாசிரியர்:
மோகன் ராஜன்
வெளியான ஆண்டு
: 2011



தூத்துக்குடி பொண்ணுய்யா... நான் தூத்துக்குடி பொண்ணுய்யா...
என் கதையை கேளுய்யா...

சொகத்தை விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாருய்யா...


அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்...

வாழ்க்கையில போண்டியாம்...

எட்டாவதா என்னப் பெத்த எங்கப்பனுக்கிது தெரியல...

சுப்பனும் அத சொல்லல... சுப்பனும் அத சொல்லல...


வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்...

வக்கனையா நான் நின்னேன்...

எழயும் கர சேர்த்ததினால் எழரையா நான் ஆனேன்...

எழரையா நான் ஆனேன்...


அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை...

பீக்காளிக்கு மறுபிள்ளை...

வளையை போல என்ன தட்டி போனானய்யா மாப்பிள்ளை...

துப்பில்லாத ஆம்பிளை... அவன் துப்பில்லாத ஆம்பிளை...


அஞ்சாம் நாள் மூட்டுவலியில் மாப்பிள்ளை தான் படுத்துட்டான்...

என் உசுர எடுத்துட்டான்...

ஒன்னு போனா ஒன்னு வந்து வருசமெல்லாம் சோர்ந்துட்டான்...

கனவையெல்லாம் ஓடச்சிட்டான்... என் கனவையெல்லாம் ஓடச்சிட்டான்...


காய்ச்சலுக்கு காடு வித்தேன்... இருமலுக்கு நிலம் வித்தேன்...

வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்...

மிச்சமாக நான் நின்னேன்... அட மிச்சமாக நான் நின்னேன்...


ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னச் சுத்தி வந்துச்சு...

இள மனச கெடுத்துச்சு...

உசுர விட மானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சது...

வயிறு எங்க கேட்டுச்சு...

ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...

நான் எல்லாத்தையும் விக்கிறேன்...

இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...

ஒரு சாண் வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன்...

நான் எல்லாத்தையும் விக்கிறேன்...

இப்ப இங்க நிக்கிறேன்... என் கதையை முடிக்கிறேன்...

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About