Wednesday, July 04, 2012

thumbnail

Tamilnadu self financing medical college fees -சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்படுகிறது

நடப்பு கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து சுயநிதி தனியார் தொழிற்கல்வி கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
இக்குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் சென்னையில் இதனை தெரிவித்தார். இதன்படி தமிழத்தில் செயல்பட்டு வரும் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்படுகிறது. 85 ஆயிரம் ரூபாயாக இருந்த பல் மருத்துவக் கல்லூரி கட்டணம் இந்த ஆண்டு ஒரு லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ் படிப்புகளை வழங்கும் மருத்துவக் கல்லூரிகளில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 10 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக வரவு செலவு விபரங்களை கல்வி கட்டண நிர்ணயக் குழு பெற்றது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு தற்போது புதிய கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டுக்கு சுயநிதி அரசுஎம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி பாலசுப்பிரமணியன்அறிவித்த ஆண்டு கட்டண விவரம்:-
1. பி.எஸ்.ஜி., கோவை - ரூ.2.50 லட்சம்
2. மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி - ரூ.2.50 லட்சம்
3. கற்பகவிநாயகா - ரூ.2.50 லட்சம்
4. ஸ்ரீ மூகாம்பிகா கன்னியாகுமரி - ரூ.2.50 லட்சம்
5. தாகூர், சென்னை - ரூ.2.50 லட்சம்
6. சென்னை மருத்துவக் கல்லூரி,திருச்சி (எஸ்ஆர்எம் குழுமம்) - ரூ.2.50 லட்சம்
7. ஈரோடு ஐஆர்டி பெருந்துறை - ரூ.2.50 லட்சம்
8. ஸ்ரீ முத்துக்குமரன் - ரூ.2.25 லட்சம்
9. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் - ரூ.2.25 லட்சம்
10. சேலம் அன்னபூரணி - ரூ.2.25 லட்சம்

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About