Friday, June 08, 2012

thumbnail

சானியா-பூபதி ஜோடி சாம்பியன்:பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா-மகேஸ் பூபதி ஜோடி போலந்தின் கிளாடியா-மெக்ஸிகோவின் சான்டியாகோ ஜோடியை எதிர்கொண்டது.


நேற்று நடந்த இந்த இறுதிப்போட்டியில் 7-6 (3), 6-3 என்ற நேர் செட்களில் போலந்து-மெக்சிக்கோ ஜோடியை வீழ்த்தி சேம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2வது முறையாக சானியா-பூபதி ஜோடி பட்டம் வென்றுள்ளனர்.



சானியாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் பாராட்டு தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் இதே வெற்றி தொடர தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்த போட்டித்தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டிக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, இத்தாலியின் சரா எர்ரானி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மோதும் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறும்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About