Thursday, June 07, 2012

thumbnail

முல்லைப் பெரியாறு அணை துளைகளை அடைப்பதில் தடங்கல்

கம்பம், ஜூன் 7: முலைப் பெரியாறு அணையில் பலத்தை சோதிப்பதற்காக போடப்பட்ட துளைகள், விரைவில் அடைக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும், துளைகளை அடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. துளைகளை அடைப்பதற்குத் தேவையான சிமிண்ட் மூட்டைகளை எடுத்துச் சென்ற லாரியை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒருவழியாக மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, இருக்கின்ற சிமிண்ட் மூட்டைகளை வைத்து துளைகளை அடைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில், இயற்கை தரும் இடைஞ்சலாக கேரளத்தில் மழைக்காலம் துவங்கியுள்ளது. இதனால் இந்தப் பணியில் தடங்கலும் தாமதமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About