Showing posts with label tamil nadu. Show all posts

Saturday, May 26, 2012

thumbnail

ஜப்பான் உயிரியல் பூங்காவிலிருந்து இருந்து தப்பித்த பென்குயின்: 2 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டது

டோக்கியோ, மே. 26 -

ஜப்பானில் நீர்வாழ் பிராணிகளுக்கான உயிரியல் பூங்கா ஒன்று டோக்கியோவில் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிலிருந்து தப்பித்துச் சென்ற பென்குயின் இரண்டு மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டுள்ளது.

ஹம்போல்ட் ரகத்தைச் சேர்ந்த இந்த ஒரு வயது பென்குயின், தன்னைவிட இரண்டு மடங்கு உயரமான ஒரு சுவற்றைத் தாண்டி இந்த பூங்காவிலிருந்து தப்பிச் சென்றது. அருகிலுள்ள ஆற்றில் குதித்த பென்குயின் ஆற்றிலேயே சுதந்திரமாக இருந்துள்ளது.

இந்த ஆற்றில் பென்குயின் இருப்பதை கண்டவர்கள் பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பென்குயினைப் பிடிக்க பூங்கா நிர்வாகம் தனது ஊழியர்களை அனுப்பியது. ஜப்பான் கடலோரக் காவல் படையினரும் அப்பணியில் ஈடுபட்டனர்.

ஒரு சமயம் காவல் படையினர் அப்பென்குயினை பிடித்துவிடும் தூரத்தில் வந்தும், அது அவர்கள் கைகளில் சிக்காமல் தப்பியோடிவிட்டது. இருமாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் சுற்றித் திரிந்த பென்குயின் பூங்காவின் ஊழியர்களின் கைகளில் சிக்கிக் கொண்டது.

பென்குயின் உடல்நலத்தை பரிசோதித்த பூங்கா ஊழியர் ஒருவர் பென்குயின் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருமாதங்களுக்கும் மேலாக பூங்கா ஊழியர்களுக்கு தண்ணி காட்டி வந்த பென்குயின் பிடிபட்டதை அடுத்து ஏராளமானோர் அப்பென்குயினை பார்வையிட்டு வருகிறார்களாம்.

Monday, May 21, 2012

thumbnail

கறுப்புப் பணத்திற்கு வெள்ளை அறிக்கை-பிரணாப் தாக்கல்!


வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு தொடர்பான முழு விவரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்தார்.

ஆனாலும் பிரணாபின் வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் பதுக்கியவரக்ளின் பெயர்களையோ, இந்தியப் பணம் எவ்வளவு கறுப்புப் பணமாக பதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையோ பிரணாப் அளிக்காமல் இருந்தது ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிக்க லோக்பால், லோகாயுக்தா போன்ற சாத்தியங்களை உருவாக்குவதில் முனைப்புக் காட்டப்படும் என்று கூறியுள்ளார் பிரணாப்.

மேலும் கறுப்புப் பணம் எவ்வளவு என்ற அரசின் உத்தேசத்தையோ, அதாவது வெளிநாடுகளில் உள்நாட்டில் உள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்ற விவரத்தையும் பிரணாப் அளிக்கவில்லை.

97 பக்க இந்த அறிக்கையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைத்து நிதிமுறைகேடுகள் செய்பவர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் தண்டனை கொடுப்பதையும் பிரணாப் வலியுறுத்தினார்.

Saturday, May 19, 2012

thumbnail

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

சென்னை:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும், என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்விஅமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.
பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம். வெளியில் பணிபுரியச் சென்றால், அரசு மருத்துவமனைகளில் ஈடுபாட்டுடன் பணிபுரிய மாட்டார்கள்.அவ்வாறு வெளியில் செல்வதைத் தவிர்ப்பதற்காக, ஆறாவது ஊதியக் குழுவின் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், குறைந்தது ஓராண்டுக்கு, கிராமப் புறங்களில் பணியாற்ற வேண்டும். அவ்வாறு, பணிபுரிய மறுப்பவர்கள், அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனை, மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக இருக்கிறது. எங்கள் மருத்துவமனையில், அதிகமாக, 1,500 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மருத்துவர்கள், எங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய தாராளமாக வரலாம். ஏனென்றால், அங்கு ஓய்வின் வயது,62 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு, 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. மேலும், ஆறு மருத்துவமனைகள் உருவாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
thumbnail

ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்: மாஜி முதல்வருக்கு சம்மன்,

மும்பை: ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வருக்குவிசாரணை கமிஷன் சம்மன்அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலப்பா பகுதியில் கார்கில் போர் தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதியை , அரசியல்வாதிகள், ராணுவ உயரதிகாரிகள் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.இதில் தொடர்புடைய அப்போதை முன்னாள் முதல்வர் அசோக சவான் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் பதவி விலகினார். மும்பை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற இருநீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.இந்நிலையில் அசோக் சவானுக்கு விசாரணை கமிஷன்நேற்று சம்மன் அனுப்பி, வரும் 23-ல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.


Friday, May 18, 2012

thumbnail

Rupee fall: Students abroad bear the brunt, fees shoot up

The sharp depreciation of the rupee has spooked the parents of students studying abroad. With the rupee closing at a low of 54.47 on Thursday, many of them are an anxious lot.

Most parents preferred to pay the term fees in installments and now are literally paying the price for it. They said they did not see it coming and were wondering how they would manage as they still had to contend with the living expenses even if they took care of the fees.

"Most students, who go overseas for higher education, are from middle or upper middle class families. Now, they find themselves forced into a hand-to-mouth existence. Increasing their allowance by even $50 is becoming more difficult," said Chandrika Sagar, mother of Praveen, who is pursuing an MS in Thayer School of Engineering in the US.

In Praveen's case, an educational loan covers his entire tuition fee unlike in India. Students abroad use downloaded study materials, borrow books and even get hand-medowns. So even though the tuition fee may not pinch, living expenses will.

Some parents who paid the fee at one go were relieved. K R Maalathi, mother of Pavithra, a student of the London School of Economics, said, "I couldn't afford the collateral security the banks asked for giving my daughter an educational loan. So I paid her fees myself. I made the decision to pay the entire tuition fee at one go. At that time, I found it quite difficult but now I think it's the best move I made. I avoided spending a lot more money unnecessarily."

Overseas education agents said that though universities give a waiver for upfront payment of fees, most parents (70%) prefer to pay it in two to three installments. "With the rupee depreciating by more than 20% since January, the difference between last term's fee and this term's has run into five digits. I did not take this into consideration when I planned the annual budget," said Siva Subramanian, whose son studies in Germany.

With the currency fall singeing pockets, students are now looking for free lunches. "My friends, who don't have a kitchen in their house, head to the ISKCON temple for a free meal, because a simple breakfast costs around 10 pounds. Sometimes the academic pressure doesn't allow us time to make even a simple sandwich at home," said Priyanka Bhavanishankar, who studies at LSE.

Agents say this increase in expenses is unlikely to result in students dropping out, but could drive many to take up part-time jobs. "Most countries allow students to work a certain number of hours during the weekdays and full time during the holidays. The local population doesn't want to work in the weekends, so many Indian students take advantage of this facility," said Naveen Chopra, chairman of The Chopras, an overseas education agency.

Thursday, May 17, 2012

thumbnail

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இன்று சென்னையில் அமலுக்கு வந்தது

சென்னை, மே. 17-
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  
 
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  
 
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.   இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
 
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-  
 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
 
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
 
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது.   இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.

Saturday, May 12, 2012

thumbnail

Super Kings dominate the Daredevils


The smiles are back and the whistle podu is finally loud and clear at the Chepauk. It's still not known whether Chennai will be in the playoffs in a week's time, but they have finally made a statement of intent, that too against the hottest team in the competition.
Their emphatic nine-wicket win over Delhi on Saturday night has taken Dhoni's boys to 15 points and they are still in a sudden-death situation as they approach the last two games in Kolkata and Mohali over the next one week.
Delhi, of course, have all but sealed one of the top-two slots, and they lacked the intensity that is so crucial in this format. With the wicket not exactly conducive for stand-and-deliver strokeplay, it needed one among the top-four to stick around for a while.
But the likes of Virender Sehwag (4), David Warner (8) and Mahela Jaywardene (8) couldn't quite do that and the Chennai spearhead Ben Hilfenhaus (3-27) deserves all the credit for restricting Delhi to a paltry 114-5. The Aussie paceman removed Sehwag with a beautiful outswinger that knocked the skipper's off stump in the very first over.
Warner was again looking in ominous touch, but he wasn't too keen to allow the initial Hilfenhaus storm to blow over. With the ball stopping just a bit after pitching, Warner went for an expansive-drive and gave a simple catch to mid-off. Hilfenhaus was again in the thick of action when he got the glove of the in-form Naman Ojha and Dhoni, diving to his left, completed the catch after a bit of fumble.
All eyes were on Jayawardene at that stage and the Delhi fans were hoping that the Sri Lankan captain will make perfect use of the stage tailor-made for his kind of batting. But he, too, kept looking for the big shots and perished, leaving his team in doldrums.
Venugopala Rao (27 off 24 balls) and Yogesh Nagar (44 off 47 balls) tried to do the repair job, but Chennai, by then, had assumed control. Dhoni changed his bowlers around, tightened the noose, and it was difficult for the lower-order to find the big shots against canny bowlers like R Ashwin and Dwayne Bravo.
From there, it was an absolute cakewalk for the Chennai batsmen and the opening pair of M Vijay and Mike Hussey put on 75 runs off the first 10 overs to make it a completely one-sided affair. While Vijay found his touch, playing some lovely shots both off the front and backfoot, Hussey looked the perfect accumulator, making maximum use of every opportunity that came his way.
He also ensured that the Chennai top order didn't miss Faf Du Plessis, who was still recovering from fever and couldn't take part in the game.
thumbnail

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையின் டீன் கனகசபை


தமிழகத்தில் போதிய அளவுக்கு செவிலியர்கள் உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் கனகசபை தெரிவித்துள்ளார்.
12-05-2012 அன்று வெளியிட்டது

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சென்னை அரசு பொது மருத்துமனையில் நாள்தோறும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சைப் பெற்று செல்வதாக கூறினார். உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேர் உள்ளதாகவும், அவர்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் தான் அதிகளவில் செவிலியர்கள் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளதாவும், இதன் மூலம் சிறந்த, தகுதிவாய்ந்த செவிலியர்கள் பயிற்சிப் பெற்று வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பணியை விரும்பி ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள செவிலியர்கள், சேவை மனப்பான்மையுடனும், மனநிறைவுடனும் இதனை செய்துவருவதாக கூறினர்.

Tuesday, May 08, 2012

thumbnail

பறக்கும் சாலைக்கு எதிர்த்து மீனவ குடும்பங்கள் போராட்டம்

சென்னை எண்ணூரில் இருந்து துறைமுகம் வரை அமைக்கப்பட உள்ள பறக்கும் சாலைக்காக வெளியேற்றப்படுவதை கண்டித்து திருவொற்றியூரில் 500 மீனவ குடும்பங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தைச் சேர்ந்த அவர்கள், மத்திய எர்ணாவூரில் ஒதுக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரியத்தின் வீடு தங்களுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளனர். சாலை அமைப்பது போக எஞ்சிய இடத்தில் தாங்கள் வசித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் எண்ணூர் - துறைமுகம் இடையே பறக்கும் சாலை அமைப்பதற்காக நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் மீனவர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

About