Showing posts with label ambethkar cartoon. Show all posts

Thursday, May 17, 2012

thumbnail

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இன்று சென்னையில் அமலுக்கு வந்தது

சென்னை, மே. 17-
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  
 
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.  
 
சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.   இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.
 
இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-  
 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.  
 
கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
 
சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.
 
இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது.   இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
 
குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.

Sunday, May 13, 2012

thumbnail

அம்பேத்கர் கேலி சித்திரம்: மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்



.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தை யாத்துத் தந்த அறிவார்ந்த பெருமக்களில் தலையாய இடம்பெற்ற டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமைந்த கேலிச் சித்திரம் இந்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுப் பாடத்திட்டத்தின்படி வெளியிடப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடநூலில் அச்சிடப்பட்டு, பாட சாலைகளுக்கெல்லாம் வினியோகிக்கப்பட்டது மன்னிக்க இயலாத கண்டனத்திற்குரியதாகும்.
வரலாற்றின் உண்மைகளை மாணவர்களுக்கு உணர்த்துவதற்கும், கற்பிப்பதற்கும்தான் பாடப்புத்தகம் பயன்பட வேண்டும். ஆனால், இந்தப் பிரச்சினையில் உண்மைக்கு நேர்மாறான தவறான தகவலை டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்துப் படம் தருகிறது. அரசியல் சட்ட வரைவுச் சட்டத்தை யாத்துத் தருகின்ற பொறுப்பையும் பெருமளவில் அம்பேத்கர் மேற் கொண்டார்.
அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பணி இமயமலையை நகர்த்தி வைக்கின்ற கற்பனைக்கு எட்டாத மிகப்பெரிய சாதனைப் பணியாகும். இந்த சபையில் அனைவருமே அர்ப்பணிப்போடு உழைத்திருக்கின்றார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் அவ்வப்பொழுது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அறிவிக்கின்ற விசாரணை கமிஷன்கள் பல வருடங்களுக்கு அறிக்கை தராமல் இருக்கின்ற இன்றைய அவல நிலையைப் போலத்தான், அரசியல் நிர்ணய சபையும் காலத்தை வீணாக விரயம் செய்தது என்ற மிகத் தவறான கருத்தை குறிப்பிட்ட கேலிச்சித்திரம் ஏற்படுத்துகிறது என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழா நடைபெறும் வேளையில், அம்பேத்கருக்கு நன்றி பாராட்டி புகழ் மகுடம் சூட்ட வேண்டிய மத்திய அரசு, அம்மாமனிதரைக் குறித்த கேலிச் சித்திரம் பாடப் புத்தகத்தில் இடம் பெறுகிற நிலை ஏற்பட்டதற்கு, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்த உடனே, உடனடியாகப் பாடப்புத்தகங்களைத் திரும்பப் பெறச் செய்யும் கடமையில் தவறியது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்த கண்டனத்தை எழுப்பிய பின்னரே பிரச்சினை எரிமலையாய் வெடிக்கக் கூடும் என்று பயந்து ஒப்புக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. குறிப்பிட்ட கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் அனைத்தையும் திரும்ப பெறும்போதே, திருத்தம் செய்யப்பட்ட புத்தகங் களை அப்பொழுதே மாணவர் களுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசு இதில் முழு வேகத்தோடு உடனடியாக செயல்பட வேண்டும்.

About