Showing posts with label cm. Show all posts

Saturday, June 30, 2012

thumbnail

Chief Minister J Jayalalithaa on Friday ordered building of flyovers and subways at an estimated cost of `231.68 crore.- பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: சென்னை பல்லாவரம், வேளச்சேரி மற்றும் கொளத்தூரில், 231.68 கோடி ரூபாயில் பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப, சாலைக் கட்டமைப்பில் தேவையான மேம்பாடுகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.231.68 கோடியில் மேம்பாலங்கள்: இதன் ஒரு பகுதியாக, சென்னை, ஜி.எஸ்.டி., சாலை, பல்லாவரம் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து, 80.74 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் மற்றும் சுரங்க நடைபாதை அமைக்கப்படுகின்றன. சென்னை, வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில், 98.22 கோடி ரூபாய் மதிப்பில், தரமணி சாலை, தாம்பரம் - வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படுகிறது. சென்னை உள்வட்டச் சாலையில், கொளத்தூர் அருகில் இரட்டை ஏரிப்பகுதியில், 52.72 கோடி ரூபாயில் பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில், மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடை பாதை அமைத்தல் என, 231.68 கோடி ரூபாயில், மேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சாலை விரிவாக்கம்: சென்னை நகரில் மெட்ரோ ரயிலுக்கான பாதை அமைக்கப்படுவதன் காரணமாகவும், சென்னை விமான நிலையம் அருகே அதிகமாக நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை விமான நிலையத்திற்கு அருகில் ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு கிலோ மீட்டர் வரை, 1.75 கோடி ரூபாய் செலவில் சாலையை அகலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 26, 2012

thumbnail

29-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 26: பெட்ரோல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 அளவுக்கு சில நாள்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளும் தங்களது எதிர்ப்பைக் காட்ட ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும்கட்சியான அதிமுகவும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியிருப்பது, வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்திராத அடாத செயல். இந்தக் கடும் விலை உயர்வைக் கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.இன்று நிலவுகிற பொருளாதாரச் சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.மத்திய அரசை தாங்கிப் பிடிக்கும் திமுக தலைவர் கருணாநிதியோ, பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. அதேசமயம், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து இருப்பது கண்துடைப்பு நாடகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகம், பல்வேறு மாநிலங்களில்...: சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய அரசு அரசைக் கண்டித்தும், விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கட்சியின் அமைப்புரீதியான 52 மாவட்டத் தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 29-ம் தேதி காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புது தில்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Sunday, May 20, 2012

thumbnail

தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்.

ற்று நீரில் விஷம் கலந்து ஊர் மக்களை கூண்டோடு அழிக்க நடந்திருக்கும் சதி தமிழகத்தை அதிர வைத்துள்ளது. நியுயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதவிட்டு பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய அல்கய்தா பயங்கரவாதிகளுக்கு கூட தோன்றாத மிக கொடூரமான சிந்தனை இது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகில் பாலாறு கரையோரம் உள்ள கிராமங்களின் மக்கள் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். பாலாற்றில் உள்ள நான்கு கிணறுகளில் எடுத்து வினியோகித்த தண்ணீரில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகப்பட்ட ஊராட்சி தலைவர்கள் உடனே உஷாரானதால் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. வீடுகளுக்கு வினியோகித்த தண்ணீரை குடிக்க வேண்டாம், சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என இரவோடு இரவாக வீதிகள் தோறும் முரசடித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தபோது, தண்ணீரில் பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.


குடிநீர் வாரியமும் தீயணைப்பு துறையும் ஊராட்சி நிர்வாகிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டுள்ளன. காவல்துறை மீது அந்த பகுதி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. காரணத்தை கண்டுபிடிப்பது கடினமல்ல. குடிநீரில் விஷம் கலக்கும் அளவுக்கு துணிந்தது ஆற்று மணலை சுரண்டி எடுத்து கொள்ளையடிக்கும் கும்பல் என மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து புகார்கள் கொடுத்தும் காவல், வருவாய் துறைகள் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே ஒன்று சேர்ந்து மணல் வண்டிகளின் வழித்தடங்களை சங்கிலியால் அடைத்துவிட்டனர். அதனால் ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளையர்கள் தண்ணீரில் விஷம் கலந்துள்ளனர் என்று அவர்கள் நம்புகின்றனர். மணல் கொள்ளையில் பணம் கொட்டுகிறது. அதன் ஒரு பகுதி அரசு எந்திரத்தின் அடிமட்டம் தொடங்கி மேலிடம் வரை பாய்வதாக நீண்டகாலமாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மணல் கொள்ளையே நடக்கவில்லை என கூறிய முதலமைச்சர், தினகரன் வெளியிட்ட முழுப்பக்க புலனாய்வு செய்தியை தொடர்ந்து, குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் பாயும் என எச்சரித்துள்ளார். அதன் பின்னரும் மணல் கொள்ளையர்கள் அச்சமின்றி கொலைகாரர்களாக மாற துணிந்திருப்பது தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்.
thumbnail

பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமருக்கு ஜெ கடிதம்



பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் : பிரதமருக்கு ஜெ கடிதம்
Sunday
2012-05-2012
சென்னை: கர்நாடக அரசு, பெண்ணையாற்றில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. தமிழக மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா நேற்று அனுப்பி கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் உருவாகி, தமிழ்நாட்டு வழியாக பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும், ஆற்றின் நீரோட்டத்தை மாற்றவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள் ளதாக தெரிய வருகிறது. இதை உங்கள் கவனத்துக்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன். தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக பெண்ணை ஆறு ஓடுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கரில் பாசனம் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்பட்டால், அதனால் மேல்குறிப்பிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது, தற்போது அமலில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். தடுப்பணை கட்டினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் சப்ளையும் தமிழகத்தில் பாதிக்கப்படும். பெண்ணையாறு கர்நாடகா - தமிழகம் ஆகிய 2 மாநிலங்களிலும் ஓடும் ஆறு என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 1892ம் ஆண்டு மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளில் பெண்ணையாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு முன்கூட்டி தெரிவிக்காமல், ஆற்றின் குறுக்கே எந்த பகுதியிலும் தடுப்பணை கட்ட கூடாது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது, ஆற்றின் நீரோட்டத்தை மாற்றுவது அல்லது ஆற்று நீரை சேமித்து வைப்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் கர்நாடக அரசு ஈடுபடக் கூடாது.
ஆனால், தடுப்பணை கட்ட முடிவெடுத்துள்ள கர்நாடக அரசு, இதுகுறித்து தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. தமிழகத்திடம் இருந்து கர்நாடக அரசு ஒப்புதலும் பெறவில்லை. மேலும், தடுப்பணை கட்டும் திட்டம் குறித்த எல்லா விவரங்களையும் தெரிவிக்கும்படி கர்நாடக அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அத்துடன், தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ள கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எந்த தகவலையும் கர்நாடக அரசு வழங்கவில்லை. எனவே, இந்த பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, பெண்ணையாற்றில் தடுப்பணை போன்ற எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ள கூடாது என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Saturday, May 19, 2012

thumbnail

காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்டவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா

பெங்களூர், மே.19-
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்டவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அக்கடிதத்தில், கர்நாடகம் காவிரி நீரைத் தவறாகக் கையாள்கிறது. தமிழகத்தின் நீரையும் சேர்த்து நான்கு அணைகளில் சேமித்துக் கொள்கிறது. கர்நாடகம் தனது கோடை காலத் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் 58.50 டி.எம்.சி. நீரையும் மே மாதம் 28.176 டி.எம்.சி, நீரைத் தனது நான்கு அணைகளின் மூலம் சேகரித்து வைத்துள்ளது.
தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரையும் சேர்த்து எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடியும் சம்பா சாகுபடியும் பெருமளவு பாதித்துள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்கவும் தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய நீரைப் பெற்றுத் தரவும் காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி பசவராஜ் பொம்மை இதுகுறித்து கூறியதாவது;
கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடகம் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறது. மத்திய நீர்வள கமிஷனின் நீர் அளவை கணக்கிடும் நிலையமும் இதை உறுதி செய்து இருக்கிறது. எனவே காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Friday, May 18, 2012

thumbnail

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, ஸ்பின்னிங் மில்லில் திடீர் ரெய்டு

திண்டுக்கல் :முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, ஸ்பின்னிங் மில்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன், மகள் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. கடந்த ஓராண்டாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் நேற்று சோதனை நடந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பெரியசாமி எம்எல்ஏ வீட்டில் இன்று ரெய்டு நடந்தது. ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மேற்கு கோகிலாபுரத்தில் உள்ளது. லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். வெளி நபர்கள் யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில்குமார் வீடு,

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் வசித்து வரும் பெரியசாமியின் மகள் இந்திராவின் வீடு மற்றும் வத்தலகுண்டு அருகே முத்துப்பட்டியில் உள்ள ஐ.பெரியசாமியின் ஸ்பின்னிங் மில் ஆகிய 4 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது. சோதனையின்போது ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா ஆகியோர் வீட்டில் இருந்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு, ஊழல் ஆகிய புகார்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். சோதனை குறித்த தகவல் பரவியதும் திமுக வக்கீல்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் ஐ.பெரியசாமி வீட்டு முன்பு திரண்டுள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போதும் ஐ.பெரியசாமியின் வீடு, மில் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. திண்டுக்கல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் ஐ.பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்

Monday, May 07, 2012

thumbnail

TN: PMK paints Anbumani as future CM

MAHABALIPURAM: Pattali Makkal Katchi leaders painted Anbumani Ramadoss, son of the party founder S Ramadoss, as the Chief Ministerial candidate for the next State Assembly election due in 2016, during the Chithirai Full Moon Vanniyar Youth Festival, here on Saturday night.
Almost all functionaries, including GK Mani, AK Moorthy and R Velu during their invocations anointed Anbumani as the CM candidate and called for the support of the entire community to this effect.
Vanniyar Sangam president ‘Kaduvetti’ J Guru began with saying that the State should be ruled by a Vanniyar for the larger good of the community. Charging the Dravidian Movement’s crusade against casteism, Guru claimed that it had led to the loss of caste orientation among the community.
As the party founder savoured the speeches promoting his son as the future CM, Guru observed that the party would go it alone in the general election and the Assembly election by using the achievements of Anbumani as Union Minister.
Anbumani, in a tone of acceptance and imitating Martin Luther King, said that he has a dream that no Vanniyan should live in a hut or in hunger. “No Vanniyan should be uneducated and unemployed and all Vanniyars should live with integrity,” he said. Employing rhetoric, he went on to say why a Vanniyan should become the CM of the State.
He observed that there was no social justice in the judiciary, with reference to the appointment of the High Court Judges. He pointed out that there were 54 HC Judges of which there was only one was from this community. “Are our advocates unfit to become a judge?” Anbumani asked.

About