Showing posts with label pmk. Show all posts

Monday, July 09, 2012

thumbnail

PMK picket liquor shops across the state on July 11 / 6172 மதுக்கடைகள் முன்பும் நாளை மறுநாள் (ஜூலை 11-ந்தேதி) காலை 11 மணிக்கு மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப் போடும் அறவழி போராட்டம் நடை பெறவுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தும் மதுவை ஒழித்து, தமிழ்நாட்டில் முழுமையான மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுத்தி வரு கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

32 மாவட்டங்களிலும் மது ஒழிப்பு மாநாடுகளை நடத்தியுள்ளோம். கடந்த 2004-ம் ஆண்டு மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையும், 2008-ல் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தையும் பா.ம.க. வெற்றிகரமாக நடத்தியது. 

பா.ம.க. நிர்வாகக் குழு கூட்டத்திலும், செயற்குழு கூட்டத்திலும் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழ்நாட்டில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் நாளை மறுநாள் (ஜூலை 11-ந்தேதி) காலை 11 மணிக்கு மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப் போடும் அறவழி போராட்டம் நடை பெறவுள்ளது.

சென்னை தியாகராய நகர் தெற்கு போக்சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மக்களை குடிகாரர்களாக்கும் மதுக்கடைகளை ஒரு போதும் திறக்க மாட்டேன் என்று கூறிய பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி தலைமையிலும், மது ஒழிப்பை வலியுறுத்தி தமது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பா.ம.க. தலைவர் கோ.க.மணி தலைமையிலும், மது விலக்கை உயிர் மூச்சாக கடைபிடித்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையிலும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. 

மற்ற இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பா.ம.க.வின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இப் போராட்டங்களில் பா.ம.க.வின் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பங்கேற்பார்கள். மது என்ற அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பதற்காக நடத்தப்படும் இந்த அறவழி போராட்டத்தில் சமய, சமுதாய தலைவர்கள்,தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மது ஒழிப்பில் ஆர்வம் கொண்டவர்கள்,சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

Sunday, May 13, 2012

thumbnail

அம்பேத்கரை அவமதிக்கும் பாடநூல்: மத்திய மந்திரி கபில்சிபல் பதவி விலக வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு பாடத்திட்டத்தின்படி வெளியிடப்பட்டுள்ள 11-ம் வகுப்பிற்கான அரசியல் அறிவியல் பாடநூலில் இந்திய அரசியல் சட்ட தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை அம்பேத்கர் நத்தை வேகத்தில் செய்வதை போன்றும், அப்பணியை விரைவுப்படுத்தும்படி அம்பேத்கரை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சாட்டையால் அடிப்பது போன்றும் அந்த கேலிச் சித்திரம் அமைந்துள்ளது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அம்பேத்கரை அவமதிக்கும் பாடநூலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தியதை அடுத்து அந்த பாடநூல்கள் திரும்பப் பெறப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கிறார்.

கபில்சிபல் பதவி ஏற்ற நாளிலிருந்தே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அவமதிக்கும் வகையிலும் அவர்களின் நலனுக்கு எதிரான வகையிலும் செயல் பட்டு வருகிறார். அதன் உச்சக்கட்டமாகத்தான் அரசியல் சட்ட தந்தை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமான மத்திய அமைச்சர் கபில்சிபல் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த பாடநூலை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

Monday, May 07, 2012

thumbnail

TN: PMK paints Anbumani as future CM

MAHABALIPURAM: Pattali Makkal Katchi leaders painted Anbumani Ramadoss, son of the party founder S Ramadoss, as the Chief Ministerial candidate for the next State Assembly election due in 2016, during the Chithirai Full Moon Vanniyar Youth Festival, here on Saturday night.
Almost all functionaries, including GK Mani, AK Moorthy and R Velu during their invocations anointed Anbumani as the CM candidate and called for the support of the entire community to this effect.
Vanniyar Sangam president ‘Kaduvetti’ J Guru began with saying that the State should be ruled by a Vanniyar for the larger good of the community. Charging the Dravidian Movement’s crusade against casteism, Guru claimed that it had led to the loss of caste orientation among the community.
As the party founder savoured the speeches promoting his son as the future CM, Guru observed that the party would go it alone in the general election and the Assembly election by using the achievements of Anbumani as Union Minister.
Anbumani, in a tone of acceptance and imitating Martin Luther King, said that he has a dream that no Vanniyan should live in a hut or in hunger. “No Vanniyan should be uneducated and unemployed and all Vanniyars should live with integrity,” he said. Employing rhetoric, he went on to say why a Vanniyan should become the CM of the State.
He observed that there was no social justice in the judiciary, with reference to the appointment of the High Court Judges. He pointed out that there were 54 HC Judges of which there was only one was from this community. “Are our advocates unfit to become a judge?” Anbumani asked.

About