Showing posts with label wind energy. Show all posts

Monday, May 28, 2012

thumbnail

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

காற்றாலை மின் உற்பத்தியில் சாதனை: ஒரே நாளில் 3,500 மெகாவாட்

தமிழகம் சாதனை படைக்கும் அளவுக்கு, காற்றாலை மின் உற்பத்தி நேற்று ஒரே நாளில், 3,500 மெகாவாட்டைத் தாண்டியது. காற்றாலை மின் உற்பத்தியால், மின்வெட்டு நீக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக, 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை, ஐந்து மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை, மின் வெட்டு இருந்தது. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காற்று வீசும் பருவ காலம் துவங்கியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கிறது. கடந்த வாரம் வரை, 2,500 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தியானது. கடந்த சில தினங்களாக, 3,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது.

சாதனை: நேற்று காலையில், 3,516 மெகாவாட் அளவுக்கு அதிகபட்ச உற்பத்தியானது. காற்றாலை வரலாற்றில், இந்தியாவில் ஒரே நாளில் எந்த மாநிலத்திலும், இவ்வளவு அதிகமாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆனதில்லை. இதுகுறித்து, மின்துறை உற்பத்திப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, அதிக அளவு காற்றாலை மின்சார உற்பத்திக்கு உகந்த இடமாக உள்ளது. இயற்கையாகவே உயர்ந்த மலைகளும், உயரம் குறைந்த குன்றுகளும், கணவாய்ப் பகுதிகளும் கலந்த பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகம் உள்ளதால், பல இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளதால், மின்சார உற்பத்தியும் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உற்பத்தி: காற்றாலை மின்சாரத்தை பொறுத்தவரை, நண்பகல் மற்றும் பகல் பொழுதை விட, நள்ளிரவிலும், காலையிலும் அதிக அளவுக்கு உற்பத்தியாகிறது. ஆனால், மாலை நேரம் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும் பகல் நேரத்தில், காற்றாலை மின் உற்பத்தி நிலையற்றதாக உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு மின் நிலைய கோளாறுகளாலும், புதிய திட்டங்களின் தாமதத்தாலும், மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், காற்றாலை மின்சாரம்தான் ஓரளவு நிம்மதியைக் கொடுத்து உள்ளது

Friday, May 25, 2012

thumbnail

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: விரைவில் மின்வெட்டு தீரும்

சென்னை, மே.26-


தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக மின்வெட்டு நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் காற்றின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. இதனால், சென்னை தவிர தமிழக கிராமங்களில் மின் வெட்டு நேரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதனால், காற்றாலை மின்உற்பத்தியும் 20 சதவீதமாக குறைந்தது. இதற்கிடையே கடந்த வாரம் மீண்டும் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. காற்றாலை மின் உற்பத்தியும் 2,500 மெகாவாட் அளவுக்கு உயரத் தொடங்கியது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த ஒரு நாளில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி 3,248 மெகா வாட்டாக அதிகரித்தது. அதாவது, தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த மின் உற்பத்தியில் 3-ல் ஒரு பங்கு காற்றாலை மூலம் கிடைத்தது. காற்றாலை மூலம் மின் உற்பத்தி இந்த அளவுக்கு அதிகமாக கிடைப்பது இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நுகர்வோர்களால் 72.002 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய காற்றாலை சங்க தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் கூறும்போது, ‘25-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி, காற்றாலை மூலம் 33 சதவீத மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதை ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் காற்றாலை மூலம் இந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்தது கிடையாது. வரும் ஜுன், ஜுலை மாதங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், காற்றாலை மின் உற்பத்தி மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, காற்றாலை மின்சார உற்பத்தியை சரியாக பயன்படுத்திய மின்வாரிய என்ஜினீயர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, May 06, 2012

thumbnail

Beta Wind Farm to invest Rs 1,857 cr in TN

Beta Wind Farm Pvt Ltd is planning to invest Rs 1,857 crore to set up a wind energy farm each in Tamil Nadu, Andhra Pradesh and Gujarat, according to the subsidiary of Orient Green Power Company Ltd, owned by the Shriram Group.
Beta was earlier planning to set up the proposed farms with the same total capital in Tirunelveli, Tuticorin and Theni , but it later decided to split the 300-megawatt endeavour and go for two more states, stating certain bottlenecks in Tamil Nadu.


Orient Green Power, in a communication to the shareholders, said “evacuation and infrastructure issues” in Tamil Nadu had prompted Beta to revisit the plan. It has now “decided to set up wind farms with a generation capacity of 156 Mw in Tamil Nadu and 144 Mw in the states of Gujarat and Andhra Pradesh, where also the returns are expected to be equally attractive in terms of power generation”. A consortium of 10 banks, led by Axis Bank, has sanctioned Rs 1,236 crore as a rupee term loan to Beta, which is engaged in generation, accumulation, transmission, distribution and supply of electricity, besides setting up of and/or maintenance of wind energy farms. The others banks include Canara Bank, Dena Bank, Karnataka Bank, Tamilnad Mercantile Bank, Vijaya Bank and Indian Overseas Bank.
thumbnail

Tamilnadu wind Energy season is between May- Oct


A. Thangavelu, Chief Engineer of Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) here, told  that agricultural load had come down with rain in several parts of the district during the last one week and industrial load gone up. Hence, the total consumption remained almost the same.
“We need to get at least 1,000 MW constantly from wind energy to reduce the duration of load shedding,” he said. Yet, power cut in the district had come down by four to six hours a day. There was no load shedding in the night.
Indian Wind Power Association chairman K. Kasthoorirangaian said that wind energy generation would increase in a couple of days. With nearly 7,000 MW of installed wind energy capacity, the State was likely to generate about 3,500 MW of wind energy this year.
In a memorandum to the TANGEDCO, he stated that it should harvest wind energy to the maximum this season.

About