Thursday, August 30, 2012

thumbnail

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்கள்: அரசு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆஸ்பத்திரிகளில் எலி, பூனை, நாய்களை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றி 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. நேதாஜி போக்குவரத்து தொழிற்சங்க மக்கள் தொடர்பாளர் சடையன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுதாக்கல் செய்தார். அதில் திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் இறந்த குழந்தையின் முகத்தில் எலி கடித்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

ஊழியர்களின் அலட்சியப் போக்கால் இது நடந்துள்ளது. இது போன்று  நடைபெறாமல் தடுக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஆறுமுகச்சாமி கொண்டடிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு  சார்பில் தலைமை  வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:-

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு கூடி விவாதித்தது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தது. திருவல்லிக்கேணி ஆஸ்பத்திரியில் எலியை ஒழிக்க தவறிய மருத்துவர்கள், ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடனே தலைமை நீதிபதி இக்பால், "அரசின் நடவடிக்கைகள் எழுத்து வடிவில்தான் உள்ளது. செயல் பாட்டில் இல்லை'' என்று கருத்து தெரிவித்தார். மனுதாரர் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதாடியதாவது:-

ஆஸ்பத்திரியில் நோயாளியின் படுக்கைக்கு கீழே நாய்கள் படுத்து இருக்கும் படங்கள் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. நோயாளியின் அறையை நாயும் பங்கிட்டு கொண்டது போல் உள்ளது. ஐ.சி.யு.வில் நோயாளி, மருத்துவர், நர்சுகள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. நோயாளியின் உறவினர் கூட அனுமதிக்கப்பட  மாட்டார். எனவே ஐ.சி.யூ.வில் எலி எப்படி சென்றது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறியதும் தலைமை நீதிபதி குறுக்கிட்டு துளைகள் இருந்திருக்க கூடும் என்றார். தொடர்ந்து வக்கீல் ஜார்ஜ்  வில்லியம்ஸ் வாதாடுகையில், "ஒரு பத்திரிகையில் தாய்-சேய் படம் போட்டு அவர்களைச் சுற்றி எலிகள் இருப்பது போல் கார்ட்டூன் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சி  தலைவர்களுக்கு கறுப்பு பூனை படை பாது காப்பு அளிப்பது போல் நோயாளிகளுக்கு எலிகள் பாதுகாப்பு கொடுப்பது போல் உள்ளது.

ஆஸ்பத்திரிகள் செல்லப் பிராணிகள் வசிப்பிடமாக மாறி வருவதையே காட்டுகிறது'' என்றார். பின்னர்  நீதிபதிகள், "மருத்துவமனைகளில், எலி, பூனை, நாய் தொல்லையை ஒழிக்க அரசு எடுத்த நடவடிக்கை பற்றிய விரிவான அறிக்கையை இன்னும் 4 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய  வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். 

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About