காஞ்சீபுரம் மாவட்டம், குன்னத்தில் 'ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி' என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு விளையாட்டு மைதானத்திடல் கட்டும் போது, கட்டுமானம் இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரியின் நிர்வாகி ஜேப்பியாரை (வயது 73) கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆக.30-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரியின் நிர்வாகி ஜேப்பியாரை (வயது 73) கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆக.30-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
06:31
Tags :
jebeer
,
latest news tamilnadu .tamilan
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments