கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.1,870 வி.ஏ.ஓ. பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தமிழகம் முழுவதும் 244 தேர்வு மையங்களில் 3,483 தேர்வுக் கூடங்களில் நடைபெறவுள்ளது.
இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களான www.tnpsc.gov.in, wwwtnpscexams.net ஆகியவற்றில் அவரவர்க்கான விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 1800 - 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலோ அல்லது conducttnpscgmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவித்துள்ளார்.

