சென்னை, ஜுன் 24 பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு (நெட்) நாடு முழுவதும் இன்று (ஜுன் 24) நடைபெறுகிறது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் தேர்வு முதல்முறையாக அப்ஜெக்டிவ்-டைப் முறையில் நடைபெறுகிறது. இதுவரை கட்டுரை வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டன. அதேபோல், தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கும் முறையும் இந்தத் தேர்விலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு தாள்களில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 வரை இந்தத் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.
பிற்பகலில் மூன்றாம் தாளுக்கான தேர்வு நடைபெறும். மொத்தம் 75 வினாக்கள் இடம்பெற்றுள்ள இந்தத் தாளுக்கான தேர்வு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். (டிஎன்எஸ்)
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் தேர்வு முதல்முறையாக அப்ஜெக்டிவ்-டைப் முறையில் நடைபெறுகிறது. இதுவரை கட்டுரை வடிவில் வினாக்கள் கேட்கப்பட்டன. அதேபோல், தவறான கேள்விக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கும் முறையும் இந்தத் தேர்விலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித் தேர்வில் மூன்று தாள்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரண்டு தாள்களில் தலா 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 வரை இந்தத் தாள்களுக்கான தேர்வுகள் நடைபெறும்.
பிற்பகலில் மூன்றாம் தாளுக்கான தேர்வு நடைபெறும். மொத்தம் 75 வினாக்கள் இடம்பெற்றுள்ள இந்தத் தாளுக்கான தேர்வு பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். (டிஎன்எஸ்)
