Showing posts with label karunanithi. Show all posts

Saturday, October 06, 2012

thumbnail

கருப்புச் சட்டை அணிந்து விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடு கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

தமிழகம் மின்னொளி இல்லாமல் இருண்டுள்ள சூழ்நிலையிலும், விலைவாசி உயர்வும், சட்டம் -ஒழுங்கு சீர்கேடும், பத்திரிகை சுதந்திரத்தையே அடக்குகின்ற அவலத்தை கண்டித்து  அறவழியில் தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
 

Friday, October 05, 2012

thumbnail

அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் பச்சைமால், சிவபதி ஆகியோர் கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இரண்டு அமைச்சர்களும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று தங்களை குறித்து அவதூறாக முரெசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து தி.மு.க., தலைவர் கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் அமைச்சர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 02, 2012

thumbnail

தலைவர் கருணாநிதி மீது அன்பு கொண்டோர் பிறந்தநாள் வாழ்த்தினை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்

இன்று காலை 10 மணி அளவில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கழக மாணவர் அணி சார்பில் மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி முன்னிலையில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இணைய தளம் மூலமாக முதல் வாழ்த்தினை பதிவு செய்து இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.

மாணவர் அணி துணை செயலாளர்கள் பூவை ஜெரால்டு, குத்தாலம் அன்பழகன் மற்றும் மாணவர் அணி தோழர்கள் உடன் இருந்தனர். உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களே வணங்குகிறேன்! வாழ்த்துக்கள்!! என முதல் பதிவினை செய்தார். உலகம் எங்கும் உள்ள தமிழர்கள், கழக தோழர்கள் மற்றும் தலைவர் கருணாநிதி மீது அன்பு கொண்டோர் வாழ்த்தினை www.wishthalaivar.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதையொட்டி மத்திய மந்திரி ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

About