Showing posts with label Tamil cinema news. Show all posts

Sunday, June 10, 2012

thumbnail

தடையறத் தாக்க தவறாமல் பார்க்க



காக்க காக்க’ படத்தில் கவுதமிடம் உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர், 


கதையின் முக்கியமான விதையை அங்கிருந்தே எடுத்து, ‘தடையறத் தாக்க’வில் விளைச்சல் 


செய்திருக்கிறார். காக்க காக்க பாண்டியா-வுக்கும், அவருடைய அண்ணனுக்கும் அப்படியென்ன 


புனிதமான பாசப்பிணைப்பு என்று ஒரு சிறுகதையை எழுதிப் பார்த்திருப்பார் போல. 


நாயகனுக்கோ, நாயகிக்கோதான் உருக்கமான ஒரு ‘ஃப்ளாஷ்பேக்’ இருப்பது நம் பண்பாடு. மாறாக 


வில்லன்களுக்கு அவ்வகையிலான ஓர் ஆச்சரிய ஃப்ளாஷ்பேக்கை முயற்சித்திருக்கிறார். 


நாயகன் பதினைந்து வயதில் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு, அப்பாடக்கர் ஆவதையெல்லாம்

அசால்ட்டாக வசனத்திலேயே கடந்துவிடுகிறார். நாயகன் – நாயகி சந்திப்பு, 


அவர்களுக்கிடையேயான ஊடல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாயகிக்கு நாயகன் மீது ஈர்ப்பு 


என்றெல்லாம் ’சீன்’ பண்ணாமல், நேரடியாக அவர்கள் காதலர்கள். நாயகியின் அப்பாவிடம் 


பெண் கேட்கிறான் நாயகன் என்று படாலென்று படம் ஆரம்பிக்கிறது. கந்து வட்டி கொடுமையை 


எதிர்த்து மெசேஜ் சொல்கிறோம் என்றெல்லாம் கழுத்தறுக்காமல், தன் கதைக்கு தேவைப்பட்டது 


பயன்படுத்திக் கொண்டேன் என்கிற இயக்குனரின் நேர்மை பாராட்டத்தக்கது.

Friday, May 18, 2012

thumbnail

ராட்டினம் படத்துக்கு ஒரு கோடி


 நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்

ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்

இசை: மனு ரமேசன்

பிஆர்ஓ:
நிகில்

தயாரிப்பு: ஜே மகாலட்சுமி

எழுத்து - இயக்கம்:
கே எஸ் தங்கசாமி

தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.


புதுமுகங்கள் நடிக்க புதிய இயக்குநர் தங்கசாமி எழுதி இயக்கியிருக்கும் ராட்டினம் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. அதன் விளைவு அந்தப்படத்தை அழகர்சாமியின் குதிரை படத்தைத் தயாரித்த மதன்,வாங்கி வெளியிட முடிவு செய்தார். அவருடன் இப்போது வேந்தர் பிலிம்ஸ் மதனும் இணைந்து கொண்டார். இதனால் அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. இதனால் இதுபோன்ற புதுமுகங்களின் படத்துக்கு வியாபாரம் என்பதே இல்லை என்பதைப் பொய்யாக்கி இந்தப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்களாம். இந்நிலையில் இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஒரு கோடி கொடுத்து சன்தொலைக்காட்சி வாங்கிவிட்டதாம்.

இதனால் படத்தின் தயாரிப்பாளருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.காரணம்,படத்தின் மொத்த பட்ஜெட்டே தொண்ணூறு இலட்சம்தான் என்கிறார்கள். அந்தப் பணத்தைச் செலவிட்டு படத்தை எடுத்து முடித்த நேரத்தில் படத்தை வெளியிடுவதற்காக மதன்கள் வாங்கிக்கொண்டதால் விளம்பரச் செலவுகள் அனைத்தும் அவர்களையே சேர்ந்துவிட்டது. இதனால் ஒரு சின்னச் சிக்கல் கூட இல்லாமல் போட்ட பணத்தை எடுத்துவிட்ட தோடு படம் ஓடுகிற அளவுக்கு இலாபத்தையும் பார்க்க முடியும் என்கிற ஒப்பந்தமும் இருப்பதால் பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

அதோடு அடுத்து ஒரு படத்தை இயக்க இதே இயக்குநரிடம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை சினிமா ரொம்ப ரொம்ப நல்ல தொழில்.

Saturday, May 12, 2012

thumbnail

Prasanna, Sneha wed


Prasanna, Sneha wed


It was D-day for actor Prasanna and actress Sneha, so to speak, as they married at a grand ceremony held at a marriage hall at Vanagaram near Chennai early on Friday.The who's who of Kollywood and leading personalities from various walks of life were present at the wedding and blessed the couple.

The engagement and reception was held on Thursday night, which saw the family members of both popular artistes attending.

The two had apparently decided to take the walk down the aisle after acting in the critically acclaimed 'Achamundu Achamundu' and are said to have waited to get the nod from both families before taking the plunge.

About