தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3 ஆம் நடைபெறுவதாக இருந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத, சுமார் எட்டரை லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளி ஆசிரியர் பணிக்கு சேரும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.