Showing posts with label congress. Show all posts

Sunday, August 19, 2012

thumbnail

81-வது பிறந்த நாள் சத்தியமூர்த்தி பவனில் மூப்பனார் படத்துக்கு மரியாதை

மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள், ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழாக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரிகள் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எச்.வசந்தகுமார், பீட்டர்அல்போன்ஸ், யசோதா, யுவராஜ், சவுந்தர்முருகன், கே.சிரஞ்சீவி, ராயபுரம் மனோ, வில்லிவாக்கம் சுரேஷ், ஜி.ஆர்.வெங்கடேஷ், குரோம்பேட்டை டி.என்.அசோகன், ஜெ.புஷ்பராமன், டி.எம்.பிரபாகரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. வதந்தி பரப்பும் எஸ்.எம்.எஸ். வீடியோ தகவல்கள் அனைத்தும் வெளிநாட்டு சதி என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரங்களில் பா.ஜனதா ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும். பின்னர் அப்படியே விட்டு விடும். இப்போது சிறுபான்மை மாணவர் கல்வி உதவி தொகையை கிளப்புகிறார்கள்.

சச்சார் கமிட்டி இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை ஆராய்ந்து வழங்கிய பரிந்துரை அடிப்படையில்தான் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியல் நடத்த வில்லை. டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு.

இலங்கையில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ்வது, ராணுவத்தை திரும் பெறுதல் போன்ற நடவடிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம். தமிழர்கள் வாழும் பகுதியில் ரெயில் பாதைகள் அமைக்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடக்கிறது. தமிழர்கள் மறு வாழ்வுக்காக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

Sunday, July 08, 2012

thumbnail

Indiya Jananayaka Katchi (IJK) leader Paari Vendhar said that, TN state government is planning to increase the sales of liquor items in the state/ மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும்: பாரிவேந்தர்

மதுரை: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது:
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. கட்சி தொடங்கி 8 மாதத்தில் 2011-ல் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, 131 தொகுதிகளில் போட்டியிட்டோம். படித்த இளைஞர்களுக்கு நாங்கள் அரசியல் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்து, அதற்குள் அவர்களை கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மக்களின் நிரந்தர தேவையான மின்சாரத்தை தொடர்ந்து கொடுக்க நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரை மின்சாரத்தை தொடர்ந்து முழுமையாக கொடுக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க உள்ளோம். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். அந்தக் கட்சிக்குத்தான் குடும்ப அரசியல் இல்லை. இது எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்துள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் லஞ்சம் குறைவாக இருந்தது. தங்கநாற்கர சாலை போன்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள். முதலில் நாம் எல்லோரும் இந்தியர் என்ற நிலை வரும் போது மதவாதம் என்ற நிலை வராது என்றார் அவர்.
தமிழகத்தில் மது விற்பனையில் ரூ.21 ஆயிரம் கோடி வருவாயை அரசு எதிர்பார்க்கிறது. இது ரூ.40 ஆயிரம் கோடியாக உயரும் போது, தமிழகத்தில 70 சதவீதம் பேர் மது அருந்தும் நிலை உருவாகிவிடும். இலவசத்தை தவிர்த்தாலே மது வருவாய் தேவையில்லாமல் போகும்.
கல்வி நிறுவனம் நடத்தும் எனக்கு, அரசியல் தேவையில்லை. மோசமான அரசியல் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க மனமின்றி அரசியலுக்கு வந்தேன். தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதில்லை.
வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டுகளைப் பெறுகின்றனர். இதனால் மக்களும் ஊழல்வாதிகளாக மாறும் சூழல் உள்ளது. தமிழகத்தில் அறிவிக்கும் திட்டங்களை, நடைமுறைப்படுத்துவது இல்லை. தனியார் ஊக்குவிப்பால் மும்பை, குஜராத் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்திலும் வளர்ச்சிக்கு தாராள தனியார்மயத்தை அனுமதிக்க வேண்டும்.
வடக்கிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதால், சிங்களர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம். மாறாக பாஜகவை ஆதரிப்போம்.
காரணம் காங்கிரஸ் கட்சியோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்தால், பாஜகவில் ஊழல் குறைவு என்றே கூற வேண்டும். பலரும் கூறுவது போல பாஜகவில் மதவாதம் துளியும் இல்லை என்றார்.

About