Showing posts with label chennai tamilnadu. Show all posts

Saturday, June 30, 2012

thumbnail

Chennai Welcomes Rain !!! சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்


சென்னை, ஜூன் 30: தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும்.
 சனிக்கிழமை பதிவான மழை அளவு (காலை 8.30 நிலவரம்):
 நீலகிரி மாவட்டம் தேவாலா - 3 செ.மீ., வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் - 2 செ.மீ., உதகமண்டலம் - 1 செ.மீ.
 சென்னையில் சனிக்கிழமை மாலை சில இடங்களில் மழை பெய்தது.

Wednesday, June 20, 2012

thumbnail

வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது எதிரொலி: 10 பஸ்கள் உடைப்பு


சேலம், 
 
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் இருக்கும் குடிசைக்கு தீவைத்து, சூறையாடப்பபட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சரும், சேலம்  மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
 
இந்த வழக்கில் பனமரத்துப்பட்டி ராஜா, தாதை கார்த்தி, கறிக்கடை பெருமாள் உள்பட பலர் கைது  செய்யப்பட்டு  சேலம் சிறையில்  அடைக்கப்பட்டனர். பனமரத்துப்பட்டி ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவந்தனர். அங்கம்மாள்  காலனி பிரச்சினையில்  கைது செய்யப்பட்ட  வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அனைவர் மீதும் 13 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் வீரபாண்டிஆறுமுகத்தின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி பிறப்பித்தார். இதற்கான உத்தரவை நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீசார்   வேலூர் சென்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வீர பாண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைத்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது சேலம் 5 ரோட்டில்  உள்ள பிரிமியர் ரோலர் மில் இடத்தை அபகரித்ததாகவும், கூட்டுறவு சொசைட்டி நிலத்தை பினாமி மூலம்  குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து அபகரித்ததாகவும், சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த  பாலமோகன்ராஜ் நிலத்தை அபகரித்ததாகவும், சேலம் கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டியதாகவும் வழக்குகள் இருந்தது. 
 
இப்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது  குண்டர்  சட்டம் பாய்ந்துள்ளது என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது  குண்டர்   சட்டம் பாய்ந்ததால் அவர் ஒரு வருடம் சிறையில் இருக்க வேண்டும். வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததால்  அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
இருப்பினும் சேலம் 3 ரோடு பகுதியில் 2 பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுபோல் சேலம் குழந்தை இயேசு பேராலயம் பகுதி, காந்தி  ஸ்டேடியம் பகுதி, புதிய பஸ்நிலையம் அருகில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா உள்பட பல பகுதிகளில் 8 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. சேலம் அருகில் உள்ள மல்லூர் பகுதியிலும் 2 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
 
நேற்று இரவு எடப்பாடி நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதி எடப்பாடி பஸ்நிலையம் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இவரைப்போல் சேலம் மாவட்டம்  முழுவதும்
10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது  விசாரித்து வருகிறார்கள். சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தில் வேறு ஏதும் அசம்பாவித சம்பவம் நடந்து விடாமல் இருக்க அனைத்து பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு   போடப்பட்டுள்ளது.
 
புதிய பஸ் நிலையம், பழைய  பஸ் நிலையம், ஜங்சன் ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நின்று கண்காணிக்கிறார்கள். சேலத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்களில் போலீசார் பாதுகாப்புக்கு சென்றும் வந்தனர்.
 
வீரபாண்டி ஆறுமுகம் மீது உள்ள வழக்குகள் விவரம்:-
 
1. அங்கம்மாள் காலனி நிலத்தை  ஆக்கிரமித்ததாக 8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
2. சேலம் பிரிமியர் ரோலர் மில் நிலத்தை மோசடி செய்தது உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு.
3. தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவரின் நிலத்தை ஆக்கிரமித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு.
4. கோயமுத்தூர் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக  8 பிரிவுகளின் கீழ் வழக்கு.
5. அக்ரோ கூட்டுறவு சங்க நில மோசடி தொடர்பாக 16 பிரிவுகளின் கீழ் வழக்கு.
6. அங்கம்மாள் காலனிக்குள் புகுந்து குடிசைகளை அடித்து நொறுக்கி தீ வைத்த கும்பலுடன் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, கூட்டு சதிசெய்ததாக வழக்கு.       

Monday, June 18, 2012

thumbnail

பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு 19ஆ‌ம் தே‌தி ஹால் டிக்கெட்

பிளஸ்2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்தமாணவர்களுக்கு உடனடி தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுகள் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம்தேதி வரை வழங்கப்படு‌கிறது எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், பிளஸ் 2 தேர்வில் பெயிலான மாணவ-மாணவிகள் ஒரு வருடத்தை வீணாக கழிக்கக்கூடாது. திறமை இருந்தால் அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதற்காக தமிழக அரசு பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு நடத்தி வருகிறது. அதன்படி ூன் 22ஆ‌ம் தேதி முதல் ூலை 4ஆ‌ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதற்கான ஹால் டிக்கெட் வரு‌ம் 19ஆ‌ம் தேதி முதல் 21ஆ‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வை பள்ளிக்கூட மாணவர்களாக, மாணவிகளாக எழுதி பெயிலானவர்கள், எழுதாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்திலேயே ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ஒரு காப்பி வைத்துக்கொண்டு அசலை முதல் நாள் தேர்வு எழுதும்போது தேர்வு மையத்தில் ஒப்படைக்கவேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மார்க்குக்கு குறைவாக தேர்ச்சி பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்துத்தேர்வும் எழுதவேண்டும்.

செய்முறை மற்றும் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை செய்யவேண்டிய தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தேர்வுகளை செய்திடுமாறு அறிவிக்கப்படுகிறார்கள் எ‌ன்று வசு‌ந்தராதே‌வி கூ‌றியு‌ள்ளா‌ர்.
thumbnail

பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.

தாம்பரம் : பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த, பெருங்களத்தூர் மேம்பாலத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
கடும் நெரிசல்
பெருங்களத்தூரில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. தினசரி ஒன்றரை லட்சம் வாகனங்கள், இவற்றின் வழியாக பல இடங்களுக்குச் சென்று வருகின்றன.
இந்த ரயில்வே கேட்டுகளை மூடும்போது, ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், "பீக் அவரில்' கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அங்கு ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று, கோரிக்கை விடப்பட்டது.
இரண்டு முறை
இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில், 76 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது, முதல் ரயில்வே கேட்டில் மேம்பாலமும், இரண்டாவது கேட்டில் இலகு ரக வாகன சுரங்கப்பாலமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அப்படிச் செய்தால், ஒன்றோடு ஒன்று மோதும் நிலைமை ஏற்படும் என்பதால், திட்டம் கைவிடப்பட்டது. பின், இரண்டு ரயில்வே கேட்டுகளுக்கு இடையே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணி பிரச்னை காரணமாக, அத்திட்டமும் கைவிடப்பட்டது.
வரைபடம் தயார்
இந்நிலையில், தற்போது இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. மேம்பாலத்திற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் துவங்க உள்ளன.
எப்படி அமைகிறது?
தாம்பரம் மேம்பால வடிவமைப்பிலேயே, பெருங்களத்தூர் மேம்பாலமும் அமைகிறது.
முதல் ரயில்வே கேட் வழியாக நெடுங்குன்றம் ஜி.எஸ்.டி., சீனிவாச ராகவன் சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலமும், இரண்டாவது ரயில்வே கேட்டில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்படுகிறது.
ரவுண்டானா மட்டுமே சற்று வித்தியாசமாக, அனைத்து லாரிகளும் எளிதாக திரும்பும் வகையில், லூப் வடிவில் அமையவுள்ளது.
69 பில்லர்கள்
நிலம் கையகப்படுத்தும் பணி, முழுவதும் முடிந்து விட்டது. மொத்தம் 96 கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.
அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், கட்டட உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு, கட்டடங்கள் இடிக்கப்படும்.
ஜி.எஸ்.டி., சாலையின், கிழக்கு பகுதியில் 22 பில்லர்கள்; மேற்கு பகுதியில் 24 பில்லர்கள்; நெடுங்குன்றம் சாலையில் 14 பில்லர்கள்; சீனிவாச ராகவன் சாலையில் 9 பில்லர்கள் என மொத்தம் 69 பில்லர்கள் அமையவுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரைபடம் தயார் செய்யப்பட்டு விட்டது.
விரைவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன.
15 மாதங்களில் இப்பணி முடிக்கப்படும். இம்மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், பெருங்களத்தூரில் நிலவிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்,' என்றார்.
புறநகரில் மூன்று இடங்களில் மேம்பாலம்
புறநகரில் போக்குவரத்து வசதிக்காக, மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. மடிப்பாக்கம் பகுதியில், மவுன்ட் மேடவாக்கம் தெற்கு உள்வட்ட சாலைகள் சந்திக்கும் இடத்தில் சுரங்கப்பாலம். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில், மவுன்ட் பூந்தமல்லி, சென்னை பெங்களூரு, பூந்தல்லி குன்றத்தூர் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். கீழ்க்கட்டளையில், மவுன்ட் மேடவாக்கம், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேம்பாலம். மேடவாக்கம் சந்திப்பில் ஒரு மேம்பாலம். இதற்கான, முதல்கட்ட ஆய்வு பணி முடிந்துவிட்டது.

About