Showing posts with label govt quota. Show all posts

Sunday, May 27, 2012

thumbnail

ஜூலை 5-ந்தேதி நடக்கும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வுக்கு 38,500 பேர் விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு கடந்த மே 15-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 38,500 விண்ணப்பங்களை மாணவ-மாணவிகள் வாங்கிச் சென்றுள்ளனர்.


விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவரிசை பட்டியல் ஜூன் 25-ந்தேதி வெளியிடப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்-ஆப் மதிப்பெண் போட்டி உள்ளது. இதனால் எம்.பி.பிஎஸ். படிப்புக்கு உரிய பாடங்களில் கட்-ஆப் மதிப்பெண் 190-க்கு கீழ் பெற்றுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிப்பார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

கடந்த ஆண்டு மொத்தம் 23 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

About