Tuesday, September 25, 2012

thumbnail

தமிழகத்தில் மின்வெட்டு தீவிரமடைகிறது




தமிழகத்தில் மின் வெட்டு தீவிரமடைகிறது
தமிழகத்தில் மின் வெட்டு தீவிரமடைகிறது
தமிழகத்தில் மின் பற்றாக்குறை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. சென்னையைத் தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு 10 மணிநேரத்திலிருந்து 15 மணி நேரம் வரைகூட நீள்கிறது.
இதன் விளைவாய் ஆங்காங்கே மின்வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்வதாக செய்திகள் கூறுகின்றன. நேற்ற்றிரவு சென்னையை அடுத்த பொன்னேரியில் ஒரு ஊழியர் தாக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரலில் கூட ஷோலிங்கநல்லூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டுமென்றும், தங்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை வேண்டுமென்றும் கோருகின்றனர், ஆனால் தொடரும் மின்வெட்டின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் கே விஜயன் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கப்பால் மின்விநியோகத்தை சரியான முறையில் வாரியம் நிர்வகிக்கவில்லை, சென்னைக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு மணிநேரமே மின்வெட்டு மற்ற பகுதிகளுக்கு பத்துமணிநேரத்திற்கும் மேல் என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் காரணங்களுக்காக இப்படிச் செய்கின்றனர்; சென்னை நுகர்வோர்கள் தாங்களாகவே முன் வந்து சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். இதெல்லாம் நடைமுறை சாத்தியமே இல்லை, இருப்பதை சமமாகப் பங்கிடவேன்டுமென கூறியும், அத்தகைய யோசனைகளுக்கு நிர்வாகம் செவி சாய்ப்பதில்லை

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About