தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள் மற்றும் 101
பேரூராட்சிகளில் குழல் விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி. போன்ற ஆற்றல்
மிக்க மின் விளக்குகள் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
|
|
. | |
இதற்கென உயர்மட்ட அதிகார குழு மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்படும் என்றும், இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தி, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், சேலம், ஓசூர், கொடைக்கானல், தேனிஅல்லிநகரம் உள்ளிட்ட 10 நகராட்சிகளுக்கு ரூ.37 கோடி செலவில் புதிய அலுவலகங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்காக அரசு மானியமாக ரூ.26 கோடி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாக இருக்கும் சூழ்நிலையில், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்வதில் நகராட்சிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன என்பதால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவினை குறைக்கும் வகையில், திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக திறன் மிகுந்த எல்இடி/ சூரிய சக்தி மின்விளக்குகள் பயன்படுத்துதல்; தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினை பின்பற்றி, மின் நுகர்வினை குறைப்பது; தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல்; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். இம்முறைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பயன்களை குறிப்பிட்ட கால முறையில் மூன்றாம் நபர்/முகமை மூலம் அளவிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments