Thursday, April 04, 2013

thumbnail

அன்னையின் அன்பு -காதம்பரி

பாண்டவர்களின் பலத்தைக் கேள்வியுற்ற காதம்பரி, பாண்டவர்கள் கவுரவர்களைத் தோற்கடித்து விடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள். தன மகன் துரியோதனனை அழைத்து அவனைப் போரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவளிடம் இருக்கும் ஒரு வரத்தை துரியோதனனுக்கு வழங்க நினைக்கிறாள். அந்த வரமானது கதாம்பரி தனது கண்களை ஆண்டுகள் பல கடந்தும் பட்டுத் துணியால் கட்டிக் கொண்டிருப்பதால் அவளுக்குக் கிடைக்கப் பெற்றது.  அதன்படி துரியோதனனை அழைத்து, அவளிடம் இருக்கும் அந்த அறிய வரத்தை அவனுக்கு வழங்க  நினைப்பதாகவும் அந்த வரத்தை துரியோதனன் பெற வேண்டுமென்றால் கதாம்பரி அவளது கண்ணைத் திறக்கும் பொழுது துரியோதனன் மீண்டும் ஒரு குழந்தையாக நிர்வாணமாக அவள் முன்  நிற்க வேண்டும் என்றும் , அதன்படி கதாம்பரி அவளது கண்களை திறந்து அவனை எங்கெல்லாம் பார்க்கிறாளோ அந்த இடங்களில் பாண்டவர்கள் அவனைத் தாக்கி வெல்ல முடியாது என்பது பொருளாகும் . ஆனால் துரியோதனன்  குழந்தையாக மாறினாலும் வெக்கம் கொண்டு இடுப்பில் ஒரு துடைக் கட்டி வந்து கதாம்பரியின் முன் நிற்கின்றான்.கதாம்பரி கண்களில் உள்ள துணியை அகற்றி அவனைப் பார்க்கும் பொழுது இடுப்புப் பகுதியைத் தவிர மற்ற எல்லாப் பகுதிக்கும் அந்த வரத்தின் அடிப்படையில் சக்தியைப் பெறுகிறான். ஆனால் இதனை அறிந்த பாண்டவர்கள் போர் நடை பெறும்போது கண்ணனிடம் இந்த உண்மையை சொல்லி துரியோதனனின் தொடைப் பகுதியில் தாக்கச் சொல்கிறான். அதன் படியே கண்ணனும் தாக்கியவுடன், துரியோதனன் அடிபட்டு கீழே சரிகிறான்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About