Friday, October 05, 2012

thumbnail

மணல் கொள்ளை: பொன்முடியை கைது செய்ய போலீஸ் தீவிரம்,/Dismisses anticipatory bail plea of former DMK minister K Ponmudi

விழுப்புரம் : தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் எங்கே இருக்கிறார் என தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொன்முடி செம்மண் அள்ளும் குத்தகை எடுத்திருந்தார். இதில் விதிமுறை மீறி மணல் அள்ளியதாக தாசில்தார் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதியப்பட்டுள்ளது. இது முதல் பொன்முடி தலைமறைவாக இருந்து வருகிறார். என்மீதும் , குடும்பத்தினர்மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. தம்மை கைது செய்தால் எனது புகழுக்கு களங்கம் ஏற்படும் எனவே தமக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். முனன்ஜாமினுக்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்தார். இன்றைய கோர்ட் தீர்ப்பை அடுத்து பொன்முடியை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About