Friday, October 05, 2012

thumbnail

அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் பச்சைமால், சிவபதி ஆகியோர் கருணாநிதி மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இரண்டு அமைச்சர்களும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று தங்களை குறித்து அவதூறாக முரெசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து தி.மு.க., தலைவர் கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் அமைச்சர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் தங்கியது குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கருணாநிதி மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About