Saturday, October 06, 2012

thumbnail

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஸ்பெண்டு: ஐகோர்ட்டு நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருப்பவர் கோவிந்தராஜுலு. இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதன் அடிப்படையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் உதயன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. ராமநாதபுரம் சென்றும் இந்த குழு விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் மேல் விசாரணை நடத்தி புகார்களின் அடிப்படையில் நீதிபதி கோவிந்த ராஜுலுவை சஸ்பெண்டு செய்தனர். இதற்கான உத்தரவை வழங்க சென்றபோது நீதிபதி வீட்டில் இல்லை. இதனை தொடர்ந்து அவரது வீட்டு கதவில் உத்தரவு நகலை அதிகாரிகள் ஒட்டி சென்றனர்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About