Friday, October 05, 2012

thumbnail

தமிழகத்திலும் அகவிலைப்படி உயர்ந்தது; அரசு ஊழியர்களுக்கு கொடுத்தார் ஜெ.,

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த சில நாட்களில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெ., உத்தரவு பிறப்பித்தார். இவரது அறிவிப்புக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் வரவேற்பும் மகிழச்சியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் உயர்த்தி வழங்கியது. இதனையடுத்து மாநில அரசுகளும் தங்களின் அறிவிப்பை வெளியிடும். அரசு ஊழியர்களுக்கு சலுகை செய்யும் அரசு என்று பெயர் பெற்ற தி.மு.க., அரசு , மத்திய அரசு அறிவித்த 24 மணி நேரத்தில் அறிவித்து விடும். அ.தி.மு.க,. அரசு அறிவிக்குமா, தருமா? தராதா என்ற அச்சத்திலேயே அரசு ஊழியர்கள் இருப்பர். வழக்கம் போல் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About