Saturday, October 06, 2012

thumbnail

தண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்புதண்ணீர் திறந்ததற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் முழு அடைப்பு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.கன்னட சலுவேலியா, கன்னட ரட்சக வேதியா, கன்னட விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் மாநிலத்தில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அம்மாநில அரசியல் கட்சிகள் பலவும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
மருத்துவர் சங்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் கர்நாடக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவின் பேங்களூர், மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், லாரிகளும் தமிழக எல்லைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About