Thursday, October 04, 2012

thumbnail

விக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்ற லாரி மாயம்


விக்கிரவாண்டியில் 20 டன் இரும்பு லோடுடன் நின்றிருந்த லாரி திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னையிலிருந்து 20 டன் இரும்பு லோடு ஏற்றிய லாரி ஜெயங்கொணடம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
ஓட்டுனர் டீ குடிப்பதற்காக விக்கிரவாண்டி அருகே கப்பையாம்புலியூரில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடித்துவிட்டு வந்து பார்த்தபோது லாரியைக் காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 9 லட்சம். இது குறித்து ஓட்டுனர் லாரி உரிமையாளர் பண்ருட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். விக்கிரவாண்டி போலீஸில் ராதாகிருஷ்ணன், புகார் தெரிவித்தார். ஆய்வாளர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About